close
Choose your channels

லோகேஷ் கனகராஜ்-க்கு உளவியல் பரிசோதனை வழக்கு: மதுரை ஐகோர்ட் முக்கிய உத்தரவு..!

Thursday, January 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-க்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் இன்று முக்கிய உத்தரவு பிறக்கப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநகரம்’ ’கைதி’ ’மாஸ்டர்’ ’விக்ரம்’ மற்றும் ’லியோ’ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தனது படங்களில் கலவரம், சட்டவிரோத செயல்கள், வன்முறை, வாகனங்களை அதிவேகமாக இயக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருப்பதாகவும் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல் தந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் கனகராஜுக்கு முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் மதுரை சேர்ந்த ராஜமுருகன் என்பவர் நேற்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மேலும் வன்முறை மிகுந்த 'லியோ’ திரைப்படத்தை அனைத்து ஊடகங்களில் ஒளிபரப்புவதை தடை செய்ய தணிக்கை குழு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது லோகேஷ் கனகராஜ், மண்டல தணிக்கை அதிகாரி, மனுதாரர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உயர்நீதிமன்ற கிளை நீதிபதி உத்தரவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.