close
Choose your channels

மதுரை வீரன் தானே.. நயன்தாரா வீட்டுக்கு பாதுகாவலராக வந்த சாமி சிலை..!

Wednesday, February 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வீட்டுக்கு மதுரை வீரன் சிலை வந்த புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதிகள் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் என்பதும் குலதெய்வ வழிபாடு உள்பட பல கோயில்களுக்கு இவர்கள் சென்று தரிசனம் செய்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் காக்கும் கடவுள் என்று அழைக்கப்படும் மதுரை வீரன் சிலையை தனது வீட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்த நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் பின்னணியில் ’மதுரை வீரன் தானே’ என்ற பறவை முனியம்மா பாடல் ஒலிக்கும் நிலையில் இந்த வீடியோவை இணையத்தில் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment