close
Choose your channels

பாலியல் தொல்லை தந்த பாஜக பிரமுகர்...! புகார் கொடுத்ததால் கத்திக்குத்து.....!

Friday, July 16, 2021 • தமிழ் Comments
BJP
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மயிலாடுதுறை மாவட்டத்தில், குத்தாலம் பக்கத்தில் இருக்கும் கோழிகுத்தி என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான், 60 வயது நிரம்பிய பாஜக நிர்வாகி மகாலிங்கம். அந்தப்பகுதியில் பாஜக நிர்வாகியாகவும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவன்6 சிறுமிகளிடம் ஆபாச படங்களை காண்பித்து, பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். சிறுமிகளை கட்டிப்போட்டு, பலாத்காரம் செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளான். இதையடுத்து பயந்துபோன சிறுமிகள், இதுகுறித்து தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், கொடூரன் மகாலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, ஜெயிலில் அடைந்துள்ளார்கள்.

இதன்பின் புகார் கொடுத்தவர்கள் மீது, மகாலிங்கத்தின் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மகாலிங்கத்தின் மகன்களான ஜவஹர், சுதாகர் உள்ளிட்டோர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, காவல் நிலையத்தில் புகாரளித்த சிறுமியின் தந்தை மீது கத்தியால் தாக்கியுள்ளனர். அவர்களை தடுக்க சென்ற சத்யராஜ் என்பவரையும் தாக்கிவிட்டு, அந்தஇடத்தில் இருந்து தப்பித்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் காயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஜவஹர், சுதாகர், சுரேஷ்குமார், இளஞ்சேரன் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment