மகத்-பிராய்ச்சி மிஸ்ரா தம்பதிக்கு ஆண் குழந்தை: புகைப்படம் வைரல்

  • IndiaGlitz, [Tuesday,June 08 2021]

நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான மகத், கடந்த ஆண்டு பிராய்ச்சி மிஸ்ரா என்ற மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிராய்ச்சி மிஸ்ரா சமீபத்தில் கர்ப்பம் ஆனார் என்பதும் கர்ப்பமான மற்றும் வளைகாப்பு  புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகத் பதிவு செய்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மகத்-பிராய்ச்சி மிஸ்ரா தம்பதிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படத்துடன் மகத் பதிவு செய்துள்ளார். கடவுள் அருளால் எங்களுக்கு ஆண் குழந்தை இன்று காலை பிறந்தது என்றும், பிராய்ச்சி மற்றும் நானும் மிகவும் சந்தோசமாக இருக்கிறோம் என்றும் எங்களுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என்றும் ஒரு அப்பாவாக மாறியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் பிராச்சி மிஸ்ரா மற்றும் குழந்தையின் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும், மேலும் மகத்-பிராய்ச்சி மிஸ்ரா தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காவலரை கடுமையாக திட்டிய பெண் வக்கீல்...! கடுப்பாகி டுவிட் போட்ட கஸ்தூரி...!

காவல் அதிகாரிகளை கடுமையாக பேசிய, பெண் வக்கீல் மீது 7 துறைகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி டுவிட்டரில் காரசாரமாக விமர்சித்துள்ளார்.

பிரபல இயக்குனரின் இயக்கத்தில் கமல்ஹாசன் - மகேஷ்பாபு?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தந்த மொழியிலுள்ள பிரபலங்கள் அந்தந்த மொழியில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது தென்னிந்திய பிரபலங்கள் இணைந்து நடிக்கும்

'இந்தியன் 2', 'விக்ரம்' படங்களுக்கு முன் ஒரு கமல் படம்?

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தற்போது 'இந்தியன் 2' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் விரைவில் அவர் நடிக்க உள்ள 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது

நடிகை அஞ்சலிக்கு திருமணமா? இணையத்தில் கசியும் தகவல்கள்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகை அஞ்சலிக்கு திருமணம் என்ற தகவல் இணையத்தில் கசிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

வெளிநாட்டு திரைப்படங்களின் சிடி விற்றால் மரண தண்டனை: இப்படி ஒரு நாடா?

வெளிநாட்டு திரைப்படங்களின் சிடிக்களை விற்றால் மரண தண்டனை என்றும் வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்தால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் ஒரு அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது