close
Choose your channels

வெளிநாட்டு திரைப்படங்களின் சிடி விற்றால் மரண தண்டனை: இப்படி ஒரு நாடா?

Monday, June 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெளிநாட்டு திரைப்படங்களின் சிடிக்களை விற்றால் மரண தண்டனை என்றும் வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்தால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் ஒரு அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உலகில் உள்ள நாடுகளில் இன்று வரை மர்மதேசமாக இருப்பது வடகொரியா என்பதும் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் சர்வாதிகாரி போல் நடந்து கொண்டு மக்களைக் கொடுமைப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. வடகொரியா நாட்டில் என்ன நடக்கிறது என்பதை வெளியுலகுக்கு தெரியாமல் உள்ளது என்பதுதான் உண்மை.

குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின் சீன எல்லையை வடகொரியா மூடி விட்டதால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் அந்நாட்டு மக்கள் திண்டாடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்தால் மக்கள் விழிப்புணர்ச்சி அடைந்து அரசை கேள்வி கேட்கத் தொடங்கிவிடுவார்கள் என்ற எண்ணத்தில் வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்தால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை என்று அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அது மட்டுமின்றி வெளிநாட்டு திரைப்படங்களின் சிடி வீடியோக்களை கடத்தி வந்து விற்பனை செய்பவர்களுக்கு மரண தண்டனை என்று அறிவித்துள்ள கிம் ஜாங் உன் அரசு, சமீபத்தில் லீ என்ற இளைஞர் வெளிநாட்டு சிடிக்களை திருட்டுத்தனமாக கொண்டு வந்ததை அடுத்து மரண தண்டனை நிறைவேற்றியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் உள்ள அனைத்து நாடுகளின் மக்களும் வீட்டிலிருந்தவாறே செல்போனிலேயே வெளிநாட்டு திரைப்படங்களை ரசித்துக் கொண்டிருக்கும் நிலையில் வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்தால் மரண தண்டனை என்று வட கொரியா நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் சட்டம் இயற்றி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.