close
Choose your channels

பெற்றோரான புதிய அனுபவம்: மகத்தின் நெகிழ்ச்சியான பதிவு!

Wednesday, June 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மகத் மற்றும் பிராச்சி மிஸ்ரா தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது என்பதும் இதனை மகத் தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தனக்கு குழந்தை பிறந்து 48 மணி நேரம் ஆகிவிட்டது என்றும், ஆனால் தன்னால் இன்னும் சந்தோசத்தை நிறுத்த முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்

கடந்த 2019ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் ஆனது என்றும் 2020ல் திருமணம் ஆனது என்றும் 2021ல் தற்போது பெற்றோர்கள் ஆகி விட்டோம் என்றும் தெரிவித்துள்ள மகத், குழந்தை பிறந்த இந்த 48 மணி நேரம் ஆகியும் எங்களால் மகிழ்ச்சியை நிறுத்தவே முடியவில்லை என்று கூறியுள்ளார்
குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே என்னுடைய பெற்றோர்கள் இருக்கும் ஐதராபாத்திற்கு சென்று விட்டோம் என்றும் அங்குதான் பிரசவத்திற்கு பாதுகாப்பு என்று தான் கருதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிராச்சிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மிகவும் அன்பானவர்கள் என்றும் பிரசவம் பார்க்கும் அறையை நாங்கள் அழகுபடுத்தினோம் என்றும் குழந்தை மற்றும் எங்களுடைய திருமண புகைப்படங்களை அந்த அறையில் வைத்திருந்தோம் என்றும் குறிப்பாக அழகிய வண்ண வண்ண விளக்குகள் மற்றும் மெல்லிய இசை அந்த அறையில் இசைக்க ஏற்பாடு செய்திருந்தோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்

குழந்தை வெளியே வந்தவுடன் எங்கள் இருவரையும் அந்த குழந்தை பார்த்தது என்றும் எங்களால் ஆனந்த கண்ணீரை நிறுத்தவே முடியவில்லை என்றும் நாங்கள் அந்த குழந்தையை மிகவும் பாதுகாப்புடன் நல்ல முறையாக வளர்ப்போம் என்றும் மத் குறிப்பிட்டுள்ளார். மேலும் குழந்தைக்கு சரியான பெயரை வைக்க தற்போது ஆலோசனை செய்து கொண்டிருப்பதாகவும் விரைவில் பெயர் அறிவிப்பு மற்றும் பெயர் வைக்கும் விழா நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.