close
Choose your channels

'கோட்' படத்தில் நடிக்க முடியாது என கூறிய பிரபல நடிகர்.. வெங்கட்பிரபுவின் ரியாக்சன்..!

Wednesday, April 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’கோட்’ திரைப்படத்தில் நடிக்க முடியாது என பிரபல நடிகர் ஒருவர் கூறிய போது வெங்கட் பிரபுவின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல மலையாள நடிகர் வினித் சீனிவாசனை வெங்கட் பிரபு அணுகியதாகவும், அப்போது தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாத நிலையில் இருப்பதாக வினித் சீனிவாசன் கூறியதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் நடிப்பில் உருவான ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ என்ற படத்தை தான் இயக்கிய நடித்துக் கொண்டிருந்ததால் ’கோட்’ படத்தின் வாய்ப்பை நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று தெரிவித்தார். ஒரு படத்தில் நான் நடிக்கிறேன் என்றால் கால்ஷீட் அட்ஜஸ்ட் செய்து நடிக்கலாம், ஆனால் நானே இயக்குனராக இருப்பதால் இன்னொரு படத்தின் கமிட்டாவது நன்றாக இருக்காது என்று நான் வெங்கட் பிரபுவுடன் கூறிய போது அவரும் அதை புரிந்து கொண்டு எதிர்காலத்தில் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்று என்னிடம் கூறியதாகவும் வினித் சீனிவாசன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வினித் சீனிவாசன் இயக்கிய ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ என்ற திரைப்படம் ஏப்ரல் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.