கொரோனா மரபணுவில் மாற்றம்-10 மடங்கு தீவிரம் கொண்ட கொரோனா வைரஸ் பரவுவதாகப் பரபரப்பு!!!

  • IndiaGlitz, [Tuesday,August 18 2020]

 

கொரோனா வைரஸ் உலகத்தையே புரட்டி போட்டிருக்கும் நிலையில் தடுப்பூசி ஒன்றே இறுதித் தீர்வாக நம்பப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸின் மரபணுவில் தொடர்ந்து மாற்றம் ஏற்படுவதாகவும் இதனால் தடுப்பூசி கண்டுபிடிப்பில் தாமதம் ஏற்படுமோ என்ற அச்சமும் தெரிவிக்கப் படுகிறது. தற்போது மலேசியாவின் சுகாதார அதிகாரிகள் அதிர்ச்சி ஏற்படுத்தும் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து கடந்த மாதம் மலேசியாவிற்கு சென்ற ஒரு நபரால் புதிய கொரோனா வைரஸ் பரவிவருவதாகவும் அந்த வைரஸ் தற்போது பரவிவரும் வைரஸைவிட 10 மடங்கு அதிகத் தீவிரம் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

14 நாட்கள் தனிமைப் படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்ட அந்த நபர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் ஓரிரு நாட்களில் பொதுவெளியில் நடமாடியதால் இதுவரை 45 பேருக்கு கொரோனா நோய்த்தொற்றை பரப்பி இருப்பதாகக் கூறப்படுகிறது. மலேசியாவின் 3 மாகாணங்களில் இந்தப் புதிய கொரோனா நோய்த்தொற்று பரவியிருப்பதால் தற்போது மேலும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் புதிய தொற்றுக்கு ஆளாகியிருக்கும் 45 பேரை ஆய்வுசெய்து பார்த்த விஞ்ஞானிகள் மற்ற வைரஸைவிட புதிய வைரஸ் 10 மடங்கு தீவிரம் கொண்டது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். அதனால் புதிய வைரஸ்க்கு டி614டி என்றும் பெயர் வைத்துள்ளனர்.

புதிய தீவிரம் கொண்ட கொரோனா வைரஸ் மலேசியாவில் மேலும் நிலைமையை மோசமாக்குமோ என்ற அடிப்படையில் அந்நாட்டு சுகாதார நிறுவனம் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற தீவிரம் கொண்ட கொரோனா வைரஸ் ஐரோப்பா நாடுகளிலும் அமெரிக்காவிலும் இருப்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் புதிய மரபணு மாற்றம் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் பலவீனத்தை ஏற்படுத்துமோ என்றும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். உலகச் சுகாதார நிறுவனம் இதுபற்றி, கொரோனா தடுப்பூசியில் மரபணு மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் திறனை பாதிக்காது என்றும் தெரிவித்து உள்ளது.

More News

தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது: வேதாந்தா கோரிக்கையை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக பொதுமக்களால் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த ஆலைக்கு தடை விதித்தது

'செம்பருத்தி' சீரியலின் பிரபலம் திடீர் மரணம்: கதறியழுத சீரியல் நடிகையின் வீடியோ

'செம்பருத்தி' சீரியலின் பிரபலம் ஒருவர் திடீரென மரணம் அடைந்து விட்டதை அடுத்து அந்த சீரியலில் நடித்த நடிகை ஒருவர் கண்ணீருடன் கதறி அழுத வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

ஜிவி பிரகாஷ் பட நாயகியின் டுவிட்டர் பக்கம் ஹேக்: பரபரப்பு தகவல்

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடித்த நடிகை ஒருவரின் டுவிட்டர் பக்கம் திடீரென ஹேக் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பான்-இந்தியா படத்திற்காக பாலிவுட் இயக்குனருடன் கைக்கோர்த்த பிரபாஸ்: டைட்டில் அறிவிப்பு 

கடந்த சில ஆண்டுகளாகவே தென்னிந்திய மாஸ் நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் பான்-இந்தியா திரைப்படங்களாக அதாவது பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களாக உள்ளன

விஜய், சூர்யா படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார்: நிஷிகாந்த் காமத் குறித்து தமிழ் நடிகை தகவல்

பிரபல பாலிவுட் இயக்குனரும், தமிழில் மாதவன் நடித்த 'எவனோ ஒருவன்' என்ற திரைப்படத்தை இயக்கியவருமான இயக்குனர் நிஷிகாந்த் காமத் நேற்று காலமானார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்