close
Choose your channels

விஜய், சூர்யா படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார்: நிஷிகாந்த் காமத் குறித்து தமிழ் நடிகை தகவல்

Tuesday, August 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் இயக்குனரும், தமிழில் மாதவன் நடித்த ’எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தை இயக்கியவருமான இயக்குனர் நிஷிகாந்த் காமத் நேற்று காலமானார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானார். இதனால் பாலிவுட் திரையுலகம் பெரும் சோகத்தில் மூழ்கியது.

இந்த நிலையில் இயக்குநர் நிஷிகாந்த் காமத், தளபதி விஜய் அல்லது சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார் என்றும் அது நடக்காமலே அவர் இறந்துவிட்டார் என்றும் நடிகை சங்கீதா தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நிஷிகாந்த் காமத் இயக்கிய ’எவனோ ஒருவன்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் சங்கீதா. இவர் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது நிகழ்ந்த பல்வேறு மலரும் நினைவுகளை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் ’லால் பாஹ்ரி’ என்ற மராத்திய மொழி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படத்தை நிஷிகாந்த் இயக்க திட்டமிட்டு இருந்ததாகவும் இந்த படத்தில் விஜய் அல்லது சூர்யாவை நடிக்க வைக்க அவர் முடிவு செய்திருந்ததாகவும் நடிகை சங்கீதா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது எண்ணம் நிறைவேறாமல் போய்விட்டது தனக்கு மிகுந்த வருத்தம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சூர்யா நடித்த ’காக்க காக்க’ திரைப் படத்தின் இந்தி ரீமேக் திரைப்படமான ‘ஃபோர்ஸ்’ என்ற படத்தை இயக்கியவர் நிஷிகாந்த் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.