close
Choose your channels

மம்தா பானர்ஜிக்கு மெஸ்ஸி அனுப்பிய சிறப்பு பரிசு

Friday, October 5, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகப்புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. கோடிக்கணக்கான கால்பந்தாட்ட ரசிகர்களின் மனதை கவர்ந்த மெஸ்ஸியை கவர்ந்தவர் நம் நாட்டில் உள்ள மாநிலத்தின் முதல்வர் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், மெஸ்ஸி பெரிதும் மதிக்கும் ஒருவர் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த ஆண்டு 17 வயதுக்குட்பட்டவர்களின் உலகக்கோப்பை கால்பந்து போட்டி கொல்கத்தாவில் நடந்த போது மேற்குவங்க அரசின் சார்பில் முழு ஒத்துழைப்பு கொடுத்த மம்தா பானர்ஜிக்கு மெஸ்ஸி தற்போது ஒரு ஜெர்ஸியை பரிசாக அனுப்பியுள்ளார்.

சிகப்பு மற்றும் நீல வர்ணங்கள் கொண்ட அந்த ஜெர்ஸியில் மேற்குவங்கத்தின் டிடி என மம்தாவின் பெயரும், 10 என்ற எண்ணும் அச்சிடப்பட்டுள்ளது. இந்த ஜெர்சியை மம்தாவை சந்தித்து நேரில் வழஙக வாய்ப்பு கிடைக்காததால், அவரிடம் கொடுக்குமாறு போட்டி ஒருங்கிணைப்பாளர்களிடம் கொடுத்து அனுப்பியுள்ளார் மெஸ்ஸி. இந்த ஜெர்ஸியை போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் இருந்து நேரில் பெற்றுக்கொண்டு தனது நன்றியை மெஸ்ஸியிடம் கூறுமாறு மம்தா கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.