close
Choose your channels

நடிகர் செந்திலின் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த சோதனை: போலீசார் அதிரடி நடவடிக்கை

Friday, November 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காமெடி நடிகர் செந்திலுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த சோதனையை போலீசார் தங்களுடைய அதிரடி நடவடிக்கை மூலம் மீட்டு கொடுத்துள்ளனர்.

பிரபல காமெடி நடிகர் செந்தில் சென்னை சாலிக்கிரமத்தில் கடந்த 2013ம் ஆண்டு 7 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை விலைக்கு வாங்கினார். இந்த அடுக்குமாடி குடியிருப்பை சகாயராஜ் என்பவருக்கு ஒன்றரை லட்சத்திற்கு செந்தில் வாடகைக்கு விட்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் செந்திலுக்கு தெரியாமல் அவரது அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை சகாயராஜ் லீஸ் மற்றும் உள்வாடகைக்கு விட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் செந்தில் அதிர்ச்சியடைந்த நடிகர் செந்தில் உடனடியாக இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அதிரடியாக செயல்பட்ட விருகம்பாக்கம் காவல்துறையினர் சகாயராஜை கைது செய்து செந்திலின் அடுக்குமாடி குடியிருப்பை மீட்டுக்கொடுத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.