குத்து மதிப்பாக 10 இலக்க எண்கள்: ட்ரூ காலர் மூலம் 50 பெண்களை பலாத்காரம் செய்தவன் கைது!

ட்ரூகாலரில் குத்துமதிப்பாக 10 இலக்க எண்களை போட்டு அதில் பெண்கள் பெயரில் வந்தால் அந்த எண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி பெண்களை தனது வலையில் வீழ்த்தி சுமார் 50 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் குரோம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் தங்கி பணிபுரிந்து வருவதாக தெரிகிறது. இவர் தனது ஓய்வு நேரத்தில் ட்ரூகாலர் மூலம் 10 இலக்க எண்களை பதிவு செய்து அதில் ஏதாவது பெண்கள் பெயர் வந்தால் அந்தப் பெண்ணின் எண்ணை சேமித்து கொண்டு அவர்களை காதல் வலையில் விழ வைப்பதே பகுதிநேர தொழிலாக செய்துள்ளார்.

அவ்வாறு தனது வலையில் விழும் பெண்களுக்கு ஆபாசமான படங்கள் வீடியோக்களை அனுப்பி அவர்களிடம் உரையாடுவது அதன்பின் நட்புடன் பழகுவது பின்னர் போலியாக காதல் செய்வது ஆகியவைகளை நிகழ்த்தி அதன் பின்னர் அந்தப் பெண்ணை நேரில் வரவழைத்து தனது பாலியல் இச்சையையும் தீர்த்துக் கொண்டதாக தெரிகிறது. இந்த வகையில் சுமார் 50 பெண்கள் வினோத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு கல்லூரி மாணவியிடமும் வினோத் தன் வேலையை காட்ட அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வினோத்தை கைது செய்தனர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சந்தானம் படத்திற்காக இணைந்த மூன்று இசையமைப்பாளர்கள்

சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' மற்றும் ஏ1 ஆகிய இரண்டு படங்களும் கடந்த ஆண்டு அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்துள்ள நிலையில், தற்போது அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று டகால்டி.

முத்தம் கொடுத்த ரசிகர்: கண்டுகொள்ளாத பிரபல நடிகை!

பிரபல நடிகை ஒருவருக்கு அவரது ரசிகர் ஒருவர் முத்தம் கொடுத்த நிலையில் அந்த ரசிகரை அவர் கண்டும் காணாமல் சென்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

"ரீ-ட்வீட் செய்தவர்களுக்கு 65 கோடி ரூபாய் பரிசு”, ஆச்சரியத்தில் ஆழ்த்திய கோடீஸ்வரர்..!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரான யுசகு மேஸவா, தனது ட்வீட்டை ரீ-ட்வீட் செய்தவர்களில் 1,000 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலா ரூபாய் 6.50 லட்சம் பரிசாக அளிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

இறுதிச்சடங்கு செய்யும்போது திடீரென எழுந்து உட்கார்ந்த பெண்!

பாகிஸ்தான் நாட்டில் இறந்த பெண் ஒருவரின் பிணத்திற்கு இறுதி சடங்கு செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்தப் பிணம் எழுந்து உட்கார்ந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர் 

தலைமுடியை விற்ற பணத்தில் தற்கொலை முயற்சி: 3 குழந்தைகளின் தாய்க்கு குவிந்த உதவி

வறுமையின் கொடுமையில் சிக்கிய மூன்று குழந்தைகளின் தாய் ஒருவர் தனது தலைமுடியை விற்று மூன்று குழந்தைகளுக்கும் உணவு வாங்கிக் கொடுத்து மீதி உள்ள காசில் விஷம் குடித்து தற்கொலை