நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக்கிய வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்பாவு என்பவரின் மகன் வடிவேலன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதனையடுத்து மார்ச் மாதம் அவர்களது திருமணம் முடிவு செய்திருந்த நிலையில் திடீரென ஊரடங்கு காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பின்னர் வருங்கால கணவர் என்ற முறையில் அந்தப் பெண் வடிவேலுவிடம் சகஜமாக பழகி வந்ததாகவும் ஓரிருமுறை தனிமையில் சந்தித்ததாகவும் தெரிகிறது. இதனால் அவர் கர்ப்பமானார் என்றும், இதனை அடுத்து தான் கர்ப்பமான விஷயத்தை அவர் வடிவேலுவிடம் தெரிவித்தபோது இதுதொடர்பாக இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று வடிவேலன் மறுத்ததாகவும் உறவினர்கள் சமாதானப்படுத்தியும் அவர் பிடிவாதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் இந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வடிவேலன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.

நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் ஒருவரால் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

More News

மணமகள் கோலத்தில் மீராமிதுன்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்த மீராமிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் சர்ச்சைக்குரிய வகையில்

தமிழ் நடிகையின் மகனுக்கு கத்திக்குத்து: சென்னையில் பரபரப்பு

பல தமிழ் திரைப்படங்களில் நடித்த கவர்ச்சி நடிகை ஒருவரின் மகனை மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

'பிகில்' திரைப்படம் ரூ.20 நஷ்டமா? அர்ச்சனா கல்பாதி விளக்கம்

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'பிகில்'. இந்த திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி

அடுத்தடுத்த அப்டேட்டுக்களை அள்ளி கொடுத்த ஜிவி பிரகாஷ்!

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவ்வப்போது தான் இசையமைத்து வரும் திரைப்படங்கள் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு வருவார் என்பது தெரிந்ததே

கொரோனா தடுப்பூசி ஆய்வில் தீவிரம் காட்டும் இந்தியாவின் 30 விஞ்ஞானக் குழுக்கள்!!!

இந்தியாவில் சுமார் 30 குழுக்களைச் சார்ந்த விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்து உள்ளார்.