close
Choose your channels

நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

Friday, May 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக்கிய வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்பாவு என்பவரின் மகன் வடிவேலன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதனையடுத்து மார்ச் மாதம் அவர்களது திருமணம் முடிவு செய்திருந்த நிலையில் திடீரென ஊரடங்கு காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பின்னர் வருங்கால கணவர் என்ற முறையில் அந்தப் பெண் வடிவேலுவிடம் சகஜமாக பழகி வந்ததாகவும் ஓரிருமுறை தனிமையில் சந்தித்ததாகவும் தெரிகிறது. இதனால் அவர் கர்ப்பமானார் என்றும், இதனை அடுத்து தான் கர்ப்பமான விஷயத்தை அவர் வடிவேலுவிடம் தெரிவித்தபோது இதுதொடர்பாக இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று வடிவேலன் மறுத்ததாகவும் உறவினர்கள் சமாதானப்படுத்தியும் அவர் பிடிவாதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் இந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வடிவேலன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.

நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் ஒருவரால் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.