அம்மாவைப் போல வேடம் போட்டு ஓட்டுநர் உரிமம் வாங்க சென்ற மகன்..!

  • IndiaGlitz, [Saturday,December 14 2019]

பிரேசிலில், தனது தாயார் ஓட்டுநர் உரிமம் பெரும் தேர்வில் மூன்று முறை தோல்வியுற்றதால் மகனே தாயைப் போல வேஷமிட்டு தேர்வுக்கு போன சம்பவம் ஓன்று நிகழ்ந்துள்ளது.

பிரேசிலைச் சேர்ந்தவர் மார்சிவிஸ் ஸ்கியாவோ இவரது தாயார் டோனா மரியா தன்னுடைய ஓட்டுநர் உரிமம் வாங்கும் தேர்வில் மூன்று முறைக்கு மேலே தோல்வியடைந்துவிட்டார். இதனையறிந்த மகன் அம்மாவிற்கு தெரியாமலேயே அவரது சான்றிதழ்களையும் அடையாள அட்டையையும் எடுத்துக் கொண்டு தாயைப் போல வேடமிட்டு ஓட்டுநர் உரிமத் தேர்வுக்கு சென்றுள்ளார்.

முதலில், வேடமிட்டு வந்த ஸ்கியோவோவை இந்த பெண்மணி குடித்துவிட்டு வந்திருப்பாரோ என தேர்வு அதிகாரிகள் சந்தேகப்பட்டுள்ளனர். பின்னர் அடையாள அட்டையைப் பார்க்கும் போது அதில் இருந்த புகைப்படத்துதடன் இவரது முகம் கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை. எனவே காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்குள் ஸ்கியாவோ பார்க்கிங் டெஸ்ட்டை முடித்துவிட்டார். இந்நிலையில் அங்கு வந்த பிரேசில் இராணுவ போலீஸ் அவரை கைது செய்து விசாரித்தது.

அப்போது தான் தாய்க்கு தெரியாமல் மகன் வேடமிட்டு வந்திருப்பது அதிகாரிகளுக்கு தெரிந்துள்ளது. அரசினை ஏமாற்ற முயன்ற குற்றத்திற்காக ஸ்கியோவோ இப்போது சிறையில் இருக்கிறார்.

More News

குழந்தைகள் ஆபாசப்படம் பகிர்ந்தவர்கள் லிஸ்டில் மருத்துவர்கள் மற்றும் தொழிலதிபர்கள்....!

குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவிட்ட திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஷாலுக்கு முதல்முறையாக ஜோடியாகும் பிரபல நடிகை!

விஷால் நடித்த 'ஆக்சன்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் 'துப்பறிவாளன் 2' என்ற படத்தில் நடித்து வருகிறார்

சென்னை மழை ஜஸ்ட் மிஸ் ஆயிருச்சு: தமிழ்நாடு வெதர்மேன்

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலையில் சென்னையிலும்

48 வயது பெண் பாலியல் பலாத்காரம், கழுத்தறுத்து கொலை: விருதுநகரில் அருகே பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே 48 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

38 வயது திருமணமாகாத பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்த தொழிலதிபர்: பின்னர் நடந்த விபரீதம்

38 வயது வரை கல்யாணம் ஆகாமல் இருந்த பெண் ஒருவருக்கு இரக்கப்பட்டு வாழ்க்கை கொடுத்ததோடு விரைவில் அவரை மனைவியாக ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருந்த சென்னை தொழிலதிபர்