ஃபேஸ்புக் நட்பால் விபரீதம்: இளம்பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்த போலி டாக்டர்!

  • IndiaGlitz, [Sunday,November 17 2019]

விசாகப்பட்டினத்தில் சேர்ந்த விசாகா என்ற இளைஞர் எந்த வேலையும் இல்லாமல் சுற்றித் திரிந்த நிலையில், குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து, குறுகிய நாட்களில் பணக்காரராக முடிவு செய்தார். இதனையடுத்து அவர் தன்னை டாக்டர் என்று அறிமுகம் செய்து ஒரு பேஸ்புக் கணக்கைத் தொடங்கினார்.

இந்த பேஸ்புக் கணக்கில் இளம்பெண்கள் பலர் அவருக்கு நட்பாகினர். அவர்களிடம் டாக்டர் என்ற முறையில் அவர் சில மருத்துவ குறிப்புகளை தெரிவித்துக் கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஒருசில இளம்பெண்கள் அவரை நேரில் சந்தித்து அவரிடம் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட விசாகா, அவர்களுடன் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து அவர்களிடம் மிரட்டி பணம் பறித்துள்ளார். இதனை வெளியிலோ அல்லது போலீஸில் சொன்னால் சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் போலி டாக்டரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் துணிந்து காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். யார் என்றே தெரியாமல் பேஸ்புக்கில் மட்டும் பழகியவருடன் நெருக்கமாக இருக்கும் இளம்பெண்களுக்கு நேரில் விபரீதங்களை இந்த சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது.

More News

ஒரே மரத்தில் கட்டிப்பிடித்தபடி தூக்கில் தொங்கிய இளம் காதல் ஜோடி!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடி ஒன்று ஒரே மரத்தில் கட்டிப் பிடித்தபடி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிக்பாஸ் தமிழ் வின்னரின் முதல் படம் ரிலீஸ் தேதி!

பிக்பாஸ் சீசன் 1 வின்னர் ஆரவ் நடித்து முடித்துள்ள 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நிறைவடைந்து

விஜய் லெவலுக்கு விஜய்சேதுபதி மாஸ் ஆகிவிட்டார்: பிரபல இயக்குனர்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன்' திரைப்படம் நேற்று வெளியாக இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை காரணமாக நேற்று இரவு ஒரு சில திரையரங்குகளிலும்

ஒரே படத்தில் நயன்தாரா மற்றும் சோனம்கபூர்!

கொரியன் திரைப்படமான 'பிளைண்ட்' என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படம் ஒன்றில் நடிகை நயன்தாரா நடித்து வருவதாகவும் இந்த படத்திற்கு 'நெற்றிக்கண்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும்

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த 'அசுரன்' பட நடிகர்

மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஏற்கனவே கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றனர்.