close
Choose your channels

ஃபேஸ்புக் நட்பால் விபரீதம்: இளம்பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்த போலி டாக்டர்!

Sunday, November 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விசாகப்பட்டினத்தில் சேர்ந்த விசாகா என்ற இளைஞர் எந்த வேலையும் இல்லாமல் சுற்றித் திரிந்த நிலையில், குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து, குறுகிய நாட்களில் பணக்காரராக முடிவு செய்தார். இதனையடுத்து அவர் தன்னை டாக்டர் என்று அறிமுகம் செய்து ஒரு பேஸ்புக் கணக்கைத் தொடங்கினார்.

இந்த பேஸ்புக் கணக்கில் இளம்பெண்கள் பலர் அவருக்கு நட்பாகினர். அவர்களிடம் டாக்டர் என்ற முறையில் அவர் சில மருத்துவ குறிப்புகளை தெரிவித்துக் கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஒருசில இளம்பெண்கள் அவரை நேரில் சந்தித்து அவரிடம் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட விசாகா, அவர்களுடன் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து அவர்களிடம் மிரட்டி பணம் பறித்துள்ளார். இதனை வெளியிலோ அல்லது போலீஸில் சொன்னால் சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் போலி டாக்டரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் துணிந்து காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். யார் என்றே தெரியாமல் பேஸ்புக்கில் மட்டும் பழகியவருடன் நெருக்கமாக இருக்கும் இளம்பெண்களுக்கு நேரில் விபரீதங்களை இந்த சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.