காலை டிபன் செய்வதில் தகராறு.. மனைவி, தாய், மகள்கள் என 5 பேர்களை கொலை செய்த சைக்கோ!

  • IndiaGlitz, [Tuesday,August 30 2022]

காலை உணவு தயாரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது தாயார், மனைவி மற்றும் 3 மகள்களை கொலை செய்த சைக்கோ ஒருவருடைய செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டேராடூன் என்ற பகுதியைச் சேர்ந்த 47 வயது மகேஷ் திவாரி என்பவர் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அவருடைய சகோதரர் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்தை வைத்துதான் அவருடைய குடும்பம் நடந்தது என கூறப்படுகிறது.

மகேஷ் திவாரி 75 வயது தாயார், 35 வயது மனைவி மற்றும் 3 மகள்களுடன் வாழ்ந்து வந்த நிலையில் மகேஷ், வேலை இல்லாமல் இருந்ததால் அவரது மனைவி அவரை வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து வரும்படி கூறியதாகவும் இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மகேஷ் தன்னுடைய மனைவியிடம் காலை டிபன் செய்ய கூறியபோது கேஸ் இல்லை என்று அவரது மனைவி பதில் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் வேறு சிலிண்டரை மாற்ற முயன்ற போது அதுவும் காலியான சிலிண்டர் என்று அவர் மனைவி கூறியதால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மகேஷ், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து தனது மனைவியின் கழுத்தை அறுத்தார். அதன்பின் தனது தாய் மற்றும் மூன்று மகள்களையும் அடுத்தடுத்து கொலை செய்தார். மகேஷ் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டதால் பக்கத்து வீட்டுக்காரர் ஜன்னல் வழியாக இந்த கொடூர சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போது மகேஷ் வீட்டை பூட்டிக் கொண்டார். இருப்பினும் வீட்டின் கதவை உடைத்து மகேஷ் திவாரியை கைது செய்த போலீசார் கொலை செய்யப்பட்ட ஐவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் மகேஷ் நீண்ட மத நம்பிக்கை உடையவர் என்றும் மணிக்கணக்கில் பூஜை செய்து வந்ததாகவும், சற்று மனநிலை சரியில்லாதவர் என்றும் கூறப்படுகிறது.
 

More News

நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை: கைதான பிரபலம் இவரா?

பிரபல நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது நெருங்கிய நண்பர் ஒருவரே கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'தளபதி 67' படத்தின் முக்கிய கேரக்டரில்.... வைரல் வீடியோ

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தளபதி 67' படம் குறித்த தகவல்கள் தினந்தோறும் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

தாய்லாந்து நீச்சல் குளத்தில் வரலட்சுமி: செம வைரலாகும் வீடியோ!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி தாய்லாந்து நாட்டில் உள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் இருக்கும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு

'கோப்ரா' பட்ஜெட் இத்தனை கோடியா? அதில் விக்ரம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

 விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கோப்ரா'. இந்த படம் நாளை விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு உலகம் முழுவதும்

அஜித்தின் 'ஏகே 62' படத்தின் நாயகி முன்னாள் உலக அழகியா? அப்ப நயன்தாரா என்ன ஆச்சு?

அஜித் நடிக்கவிருக்கும் 62வது படமான  'ஏகே 62' என்ற திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்றும் இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார் என்றும் கடந்த சில மாதங்களாக ஊடகங்கள்