அடுத்தவர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு: பொங்கல் தினத்தில் வெட்டி கொல்லப்பட்ட வாலிபர்

  • IndiaGlitz, [Friday,January 17 2020]

அடுத்தவர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த 26 வயது வாலிபர் ஒருவர் பொங்கல் தினத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரமேரூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரமேரூர் பகுதியைச் சேர்ந்த தசரதன் என்பவருக்கும் அஸ்வினி என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என தெரிகிறது. இந்தநிலையில் தசரதன் வீட்டிற்கு அடிக்கடி மதன் என்பவர் என்று அடிக்கடி வந்து சென்றுள்ளார். அவருக்கும் தசரதன் மனைவி அஸ்வினிக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியதாக தெரிகிறது. இந்த நிலையில் இருவரும் திடீரென ஒருநாள் மாயமாகினர். இதுகுறித்து தசரதன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் அஸ்வினி மற்றும் மதன் ஆகியோர் தேடப்பட்டு வந்த நிலையில் திடீரென மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராக அஸ்வினி தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் அவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றும் கூறிவிட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் தசரதன் ஆத்திரத்தில் இருந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட மதன் உத்திரமேரூர் திருப்பியுள்ளார் இதனை அடுத்து தசரதன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மதனை வெட்டிக்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தசரதன் மற்றும் அவரது நான்கு நண்பர்களையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

ஒரு லட்ச ரூபாயை கூட கண்ணால் பார்க்காதவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் வரி! அதிர்ச்சி தகவல்

இதுவரை வாழ்நாளில் ஒரு லட்ச ரூபாயைக் கூட மொத்தமாக கண்ணால் பார்க்காத தினக்கூலி வேலை செய்து வரும் ஒருவருக்கு ஒன்றரை கோடி வரி விதித்து வருமான வரி அலுவலகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது

எம்ஜிஆரை நேரில் பார்த்தது போல் உள்ளது: தொண்டர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சி!

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கி வரும் 'தலைவி' திரைப்படத்தில் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமியும், ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரணாவத்தும்

தமிழகம் முழுவதும் பல பெயர்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு – ஒரு பார்வை

விஞ்ஞானமும் அறிவியலும் வளர்ச்சியடையாத ஒரு வாழ்வியல் முறையில் எருதினை அடுக்குதல் மிகவும் உயர்ந்த வீரமாகக் கருதப்பட்டிருக்கலாம்

கார்த்தியின் அடுத்த படத்தின் ரிலீஸ் எப்போது?

கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு தேவ், கைதி மற்றும் தம்பி ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியானது. இதில் கைதி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 

'மாநாடு' படத்தின் முழு தகவல்கள் இதோ

சிம்பு நடிக்கவிருக்கும் 'மாநாடு' திரைப்படத்தின் அறிவிப்புகள் இன்று மாலை 6 மணி முதல் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் வெளியாகிவிட்டன