மனைவியை கொன்று தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய கணவன் கைது!

  • IndiaGlitz, [Wednesday,December 04 2019]

மனைவியை கொலை செய்து விட்டு தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே என்ற பகுதியில் துஷார் சாம்ரே என்பவருக்கும் காஞ்சன் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து ஐந்து வருடங்கள் ஆகியும் அவர் அவ்வப்போது தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் துஷார் சாம்ரேவுக்கும் அவருடைய மனைவிக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை தனது மனைவியிடம் மீண்டும் ரூபாய் ஒன்றரை லட்ச ரூபாய் அவருடைய தந்தையிடம் இருந்து பெற்று வருமாறு கொடுமைப்படுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அவரது மனைவி மறுக்கவே ஆத்திரமடைந்த துஷார் சாம்ரே, தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனையடுத்து வலி தாங்க முடியாமல் மயக்கமுற்ற மனைவி காஞ்சன், பின்னர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த துஷார் சாம்ரே, உடனே மனைவியின் பிணத்தை சிலிங் ஃபேனில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகம் ஆடியுள்ளார். ஆனால் காஞ்சனின் பெற்றோர்கள் தங்களது மகல் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும் அவரது கணவர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்க இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து துஷார் சாம்ரேவை விசாரணை செய்தனர். விசாரணையில் தனது மனைவியை கொன்றதாக துஷார் சாம்ரே ஒப்புக் கொண்டதை அடுத்து அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

More News

வயலில் இறங்கி வெங்காய அறுவடை செய்த திருடர்கள்: அதிர்ச்சியில் விவசாயி 

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தில் வெங்காயம் பயிர் செய்து இருந்த நிலையில் நேற்று இரவு நேற்று திடீரென மர்ம நபர்கள் சிலர்

கூகுளின் தாய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமனம்

சென்னையை சேர்ந்த தமிழரான சுந்தர் பிச்சை அவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக

நாய்களை புலிகளாக்கிய விவசாயிகள்..! கர்நாடகாவில் விசித்திரம்.

நாயை புலி போல மாற்றி தங்கள் வயல்களை பாதுகாக்கின்றனர் விவசாயிகள். கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது நலுரு கிராமம். இங்கு தான் நாயை புலியாக மாற்றும் விசித்திரம் நடக்கிறது

ஒரு வருடத்திற்கு கெடாமல் இருக்கும் ஆப்பிள் கண்டுபிடிப்பு..!

குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் சுமார் ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் என்று கூறப்படும் ஒரு புதிய வகை ஆப்பிள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது

சாக்லேட் கொடுத்து ஏமாற்றி 8 வயது சிறுமியை நாசம் செய்த குடிகாரன்: அதிர்ச்சி தகவல்

ரியங்கா ரெட்டி உள்பட பல இளம்பெண்களும், சிறுமிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையும் செய்யப்பட்டு வருவதாக தினந்தோறும் செய்திகள் வெளிவ்நது