செல்போன் அழைப்பை எடுக்காத காதலி: சோகத்தில் 3வது மாடியில் இருந்து குதித்த சென்னை வாலிபர்!

  • IndiaGlitz, [Saturday,September 12 2020]

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர் கடந்த சில மாதங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் திடீரென அந்தப் பெண் காதலை முறித்துக் கொண்டதால் ஏற்பட்ட சோகத்தில் 3வது மாடியில் இருந்து குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த 22 வயதான துரை, ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் ஒரு பெண்ணை துரை தீவிரமாக காதலித்து வந்த நிலையில் திடீரென அந்தப் பெண் காதலை முறித்துக்கொண்டார். அடிக்கடி துரையை நேரில் சந்தித்து வந்த காதலி, திடீரென நேரில் சந்திப்பதை தவிர்த்து மொபைல் போனில் மட்டும் பேசி கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மொபைல் போனிலும் அவர் தொடர்பு கோள்ளவில்லை.

துரை செல்போன் மூலம் அழைத்தாலும் அவரது செல்போன் அழைப்பையும் அவரது காதலி தவிர்த்து வந்ததாக தெரிகிறது. பலமுறை காதலியிடம் தொடர்பு கொண்டும் அவர் செல்போன் அழைப்பை ஏற்க மறுத்ததால் சோகமான துரை, அருகில் இருந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

மூன்றாவது மாடியில் இருந்து குதித்து இரத்த வெள்ளத்தில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் காப்பாற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் மயக்கமுற்ற நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். துரையின் காதலிடமும் போலீசார் விசாரணை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
 

More News

கொரோனாவை குணமாக்கும் கருப்புத்தங்கம்: வைரமுத்து!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது நேற்றும் கூட தமிழகத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும்

போதைப்பொருள் வழக்கு: ரியாவின் வாக்குமூலத்தில் சிக்கிய சூர்யா, கார்த்தி, தனுஷ் பட நடிகைகள்?

கன்னட திரையுலகில் மட்டுமன்றி பாலிவுட் திரை உலகிலும் தற்போது போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கன்னட நடிகை ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி

வைகை புயலுக்கு வாழ்த்துக்கள்: இந்திய அளவில் டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்!

தமிழ் திரையுலக வரலாறு எழுதினால் அதில் வடிவேலுவை ஒதுக்கி வைத்துவிட்டு எழுத முடியாது. அந்த அளவுக்கு சினிமா நகைச்சுவையில் கொடிகட்டி பறந்து வரும் வைகைப்புயல் வடிவேலு

முதல் தடவ எங்கள கஷ்டப்படுத்திட்ட அண்ணே: வடிவேல் பாலாஜி குறித்து 'மாஸ்டர்' நடிகர் உருக்கம்!

முதல் தடவ எங்கள கஷ்டப்படுத்திட்ட அண்ணே… என 'மாஸ்டர்' உள்ளிட்ட ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமாக தெரிவித்துள்ளார்

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் முன்னணி தமிழ் நடிகை?

'பிக்பாஸ் 4' நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.