ஹெல்மெட்டுக்குள் சுருண்டு கிடந்த பாம்பு..தலையில் சுமந்தபடி 11 கி.மீ பயணித்த ஆசிரியர்..!

  • IndiaGlitz, [Thursday,February 13 2020]

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மாமலை கிராமத்தைச் சேர்ந்தவர், கே.ஏ.ரஞ்சித். சம்ஸ்கிருத ஆசிரியரான இவர் அங்குள்ள பள்ளிகளில் தனியாகப் பாடம் நடத்தி வருகிறார். அவர் தன் வீட்டிலிருந்து தினமும் காலையில் 8.30 மணிக்குப் புறப்பட்டு கண்டநாட் பகுதியில் உள்ள செயிண்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் பாடம் நடத்துவார்.

அந்தப் பள்ளியில் பாடம் முடிந்த பின்னர், 6 கி.மீ தூரத்தில் இருக்கும் திருப்புணித்துறை ஆர்.எல்.வி பள்ளியில் பாடம் நடத்துவார். வழக்கமான இந்தப் பணிக்காக இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட அவர் பாடங்களை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவதற்காகக் கிளம்பியிருக்கிறார்.

இரு சக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டச் சென்றபோது வால் போல எதுவோ தொங்கியுள்ளது. பதறிப்போன அவர் பார்த்தபோது பாம்பு ஒன்று ஹெல்மெட்டின் உள்ளே இருக்கும் பஞ்சுப் பகுதியில் பதுங்கியிருப்பதைக் கண்டுள்ளார். பள்ளியில் உள்ள நண்பரின் உதவியுடன் அதை வெளியில் எடுத்தபோது, இறந்தநிலையில் கிடந்துள்ளது.

கே.ஏ.ரஞ்சித்தின் வீட்டின் அருகே சிறிய குளம் உள்ளது. அதன் அருகில் புதர் மண்டிக் கிடந்துள்ளது. அங்கிருந்து ஹெல்மெட்டுக்குள் பாம்பு ஏறியிருக்க வேண்டும் என்று அவர் சந்தேகிக்கிறார். ஹெல்மெட்டில் பாம்பு இருப்பது தெரியாமலே 11 கி.மீ தூரம் பயணம் செய்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

பாம்பைத் தலையில் சுமந்தபடி பயணித்ததால் பயமடைந்த அவர் உடனடியாக நண்பரின் உதவியுடன் தாலுகா மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டன. அதில், அவரைப் பாம்பு கடிக்கவில்லை என்பது தெரியவந்தது. அதன் பின்னரே அவர் நிம்மதியடைந்தார். ஹெல்மெட்டுக்குள் இறந்து கிடந்த பாம்பு கட்டுவிரியன் வகையைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. கேரளாவில் அதை வெள்ளிக்கீற்றன், சங்குவாயன், எட்டடிவீரன் எனப் பல பெயர்களில் அழைக்கிறார்கள். இந்த வகை பாம்பு கடித்தால் தலையில் விஷம் ஏறி மரணம் நிகழக்கூடும் என்கிறார்கள். பாம்புக் கடியிலிருந்து தப்பிய ரஞ்சித், பாம்பு ஏறிய ஹெல்மெட்டைத் தீ வைத்துக் கொளுத்தினார்.

More News

உலக அதிசயத்தில் ஒன்றாக இடம் பெற போகிறது தஞ்சை பெரிய கோவில்..! ஒருங்கிணைப்புக்குழு முழு முயற்சி.

பெரிய கோயிலை உலக அதிசயங்களின் பட்டியலில் சேர்ப்பதற்காக சமூக ஆர்வலர்கள் இணைந்து குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

70 குழந்தைகள் முன்னிலையில் நடுவானில் வெளியான 'வெய்யோன் சில்லி

நடிகர் சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் 'வெய்யோன் சில்லி' என்ற பாடல் நடுவானில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏழை மாணவர்கள் முன்னிலையில் வெளியாகும்

இறந்து போன மகளை விர்ச்சுவல் உலகத்தில் பார்த்து ரசித்த அம்மா..! வேகம் பெறும் VR தொழில்நுட்பம்.- வீடியோ

சிறப்பு கையுறை அணிந்து, தன் மகளின் நிழலைப் பார்க்கும் தாய்,மகள் நேயோனை தொட முயற்சிக்கிறார். இந்த அனுபவத்தைத் குறித்து தெரிவித்த ஜாங், “இது எனது கனவு. அந்த கனவை நான் வாழ்ந்துவிட்டேன்” என்கிறார்.

மாஸ்டரை ஹெட்மாஸ்டராக ஆக்கிவிடாதீர்கள்: அரசியல்வாதிகளுக்கு விஜய் ரசிகர்கள் எச்சரிக்கை

தளபதி விஜய் நடித்த திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சைக்கு பின்னரோ அல்லது வெளிவந்த பின்னர் சர்ச்சை ஏற்படுவதோ வழக்கமாகி வருகிறது

பண்டைய தமிழர்கள் ஏன் மரங்களை வழிபட்டார்கள்? கோவில்களில் கொடி மரம் எப்படி வந்தது?

பண்டை தமிழ் மக்கள் மரம், செடி, கொடி, சூரியன் என்று இயற்கை தெய்வங்களை வழிபட்டார்கள்