கணவரின் உடலை சுடுகாடு வரை சுமந்து சென்ற மந்த்ராபேடி: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Friday,July 02 2021]

தமிழில் சிம்பு நடித்த ’மன்மதன்’ ஜிவி பிரகாஷ் நடித்த ’அடங்காதே’ உள்பட ஒரு சில படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகை மந்திரா பேடி. இவருடைய கணவர் ராஜ்குஷால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென மாரடைப்பால் காலமானார்.

ராஜ்குஷால் காலமாவதற்கு ஒரு நாளுக்கு முன்புதான் அவர் தனது நண்பர்களை அழைத்து வீட்டில் பார்ட்டி வைத்து இருந்தார். அந்த பார்ட்டியில் மந்த்ராவின் தோழிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி கொண்டு இருந்த நிலையில் திடீரென ராஜ்குஷால் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் ராஜ்குஷால் அவர்களின் இறுதிச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கணவரின் உடலை தானே சுமந்து கொண்டு சுடுகாடு வரை மந்த்ராபேடி சென்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அந்த அளவுக்கு அவர் கணவரின் மேல் பாசம் வைத்திருந்ததை பார்த்து அவரது உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 1999 ஆம் ஆண்டு ராஜ்குஷாலை திருமணம் செய்து கொண்ட மந்திரா பேடிக்கு ஒரு மகன் உள்ளார் என்பதும் அதன் பிறகு பெண் குழந்தை ஒன்றை தத்து எடுத்துக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜ்குஷால் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

"மன்மதன்" ரிட்டர்ன்ஸ்.....! இணையத்தில் வைரலாகும் சிம்பு புகைப்படங்கள்...!

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம்தான் மாநாடு. இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்

ரம்யா பாண்டியனின் உதட்டை கடித்து முத்தம்: வைரல் வீடியோ

'குக் வித் கோமாளி சீசன் 1'  மற்றும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரம்யா பாண்டியன் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் குறிப்பாக

வசீகரத் தோற்றம் கொண்ட ரொனால்டோவின் டயட் சீக்ரெட்… 36 வயதில் செம ஃபிட் எப்படி?

உலகில் அதிக ரசிகர்களைக் கொண்ட கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு முன்னாள் வைக்கப்பட்டு இருந்த கோக் பாட்டிலை எடுத்து ஓரமாக வைத்தார்

ஓடிடியில் 'நாரப்பா': அதிர்ச்சியில் ரசிகை செய்த விபரீத செயல்!

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் திரைப்படமான 'நாரப்பா' என்ற படம் ஓடிடியில் வெளியாக இருப்பதை அறிந்த ரசிகை ஒருவர் தனது கையை பிளேடால் அறுத்து கொண்ட

சூர்யா நடத்தும் தடுப்பூசி முகாம்: யாருக்காக தெரியுமா?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்