close
Choose your channels

கணவரின் உடலை சுடுகாடு வரை சுமந்து சென்ற மந்த்ராபேடி: வைரல் புகைப்படங்கள்!

Friday, July 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழில் சிம்பு நடித்த ’மன்மதன்’ ஜிவி பிரகாஷ் நடித்த ’அடங்காதே’ உள்பட ஒரு சில படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகை மந்திரா பேடி. இவருடைய கணவர் ராஜ்குஷால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென மாரடைப்பால் காலமானார்.

ராஜ்குஷால் காலமாவதற்கு ஒரு நாளுக்கு முன்புதான் அவர் தனது நண்பர்களை அழைத்து வீட்டில் பார்ட்டி வைத்து இருந்தார். அந்த பார்ட்டியில் மந்த்ராவின் தோழிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி கொண்டு இருந்த நிலையில் திடீரென ராஜ்குஷால் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் ராஜ்குஷால் அவர்களின் இறுதிச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கணவரின் உடலை தானே சுமந்து கொண்டு சுடுகாடு வரை மந்த்ராபேடி சென்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அந்த அளவுக்கு அவர் கணவரின் மேல் பாசம் வைத்திருந்ததை பார்த்து அவரது உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 1999 ஆம் ஆண்டு ராஜ்குஷாலை திருமணம் செய்து கொண்ட மந்திரா பேடிக்கு ஒரு மகன் உள்ளார் என்பதும் அதன் பிறகு பெண் குழந்தை ஒன்றை தத்து எடுத்துக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜ்குஷால் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.