மணிரத்னத்துடன் இணையும் 9 இயக்குனர்கள்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் தற்போது ’பொன்னியின் செல்வன்’ என்ற பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தாலும் விரைவில் இந்த திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்னர் குறுகிய கால தயாரிப்பாக ஒரு திரைப்படத்தை மணிரத்னம் இயக்க இருப்பதாகவும், இந்த படம் ’ஓகே கண்மணி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது ஓடிடி பிளாட்பாரத்திற்காக இயக்குனர் மணிரத்னம் ஒரு வெப்தொடரை தயாரிக்கவிருப்பதாகவும், இவரது தயாரிப்பில் உருவாக உள்ள இந்தத் தொடரில் 9 எபிசோடுகள் உருவாக இருப்பதாகவும் ஒவ்வொரு எபிசோடையும் ஒரு முன்னணி இயக்குனர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன

தமிழின் முன்னணி டைரக்டர் கவுதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் நரேன் உள்ளிட்டோர் தலா ஒரு எபிசோடுகளை இயக்கவிருப்பதாகவும், இதில் தெலுங்கு திரையுலக இயக்குனர்களும் சிலர் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த வெப்தொடர் ஓடிடி பிளாட்பாரத்தில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

தயாரிப்பு, இயக்கத்தில் களமிறங்கும் முன்னணி நடிகை!

ஒரு முன்னணி நடிகை, தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் களமிறங்குவது மிக அரிதாகவே இந்திய திரையுலகில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது முன்னணி நடிகை ஒருவர் ஒரு திரைப்படத்தை

ஊரடங்கில் டாஸ்மாக் திறப்பது போல அல்ல 10ம் வகுப்பு தேர்வு: நீதிபதிகள் அதிரடி கருத்தால் பரபரப்பு

பத்தாம் வகுப்பு பொது தேர்வு வரும் 15ஆம் தேதி நடத்த தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக நடத்தி வந்த நிலையில் இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில்

யாரெல்லாம் முகக்கவசம் அணிய வேண்டும் – WHO கூறியுள்ள புது விதிமுறைகள்!!!

உலகச் சுகாதார அமைப்பானது தனது முந்தைய வழிகாட்டுதல்களில் “ஆரோக்கியமான நபர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும் வயதானவர்கள்,

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் அஞ்சலி?

நானும் ரெளடிதான்' 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய திரைப்படங்களை அடுத்து கடந்த இரண்டு வருடங்களாக வேறு எந்த திரைப்படத்தையும் இயக்காமல் இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன்

தமிழ்நாட்டில் இருந்து தனிமைப்படுத்தப்படுகிறதா சென்னை? அதிர்ச்சி தகவல்

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் தமிழகத்தின் மொத்த பாதிப்பில்