close
Choose your channels

மணிரத்னத்துடன் இணையும் 9 இயக்குனர்கள்!

Monday, June 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் தற்போது ’பொன்னியின் செல்வன்’ என்ற பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தாலும் விரைவில் இந்த திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்னர் குறுகிய கால தயாரிப்பாக ஒரு திரைப்படத்தை மணிரத்னம் இயக்க இருப்பதாகவும், இந்த படம் ’ஓகே கண்மணி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது ஓடிடி பிளாட்பாரத்திற்காக இயக்குனர் மணிரத்னம் ஒரு வெப்தொடரை தயாரிக்கவிருப்பதாகவும், இவரது தயாரிப்பில் உருவாக உள்ள இந்தத் தொடரில் 9 எபிசோடுகள் உருவாக இருப்பதாகவும் ஒவ்வொரு எபிசோடையும் ஒரு முன்னணி இயக்குனர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன

தமிழின் முன்னணி டைரக்டர் கவுதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் நரேன் உள்ளிட்டோர் தலா ஒரு எபிசோடுகளை இயக்கவிருப்பதாகவும், இதில் தெலுங்கு திரையுலக இயக்குனர்களும் சிலர் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த வெப்தொடர் ஓடிடி பிளாட்பாரத்தில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.