எவிக்சனுக்கு பின் மணிகண்டன் வெளியிட்ட உருக்கமான பதிவு!

  • IndiaGlitz, [Tuesday,January 03 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 85 நாட்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஞாயிறு அன்று இந்த நிகழ்ச்சியிலிருந்து மணிகண்டன் எவிக்சன் செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் செய்யப்பட்ட மணிகண்டன் உருக்கமான பதிவு செய்துள்ள நிலையில் தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது கடந்த வாரம் வெளியான மணிகண்டனையும் சேர்த்து மொத்தம் 13 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இதனை அடுத்து தற்போது 8 போட்டியாளர்களை உள்ள நிலையில் இதில் நான்கு போட்டியாளர்கள் கிராண்ட் ஃபினாலேவுக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று எவிக்சன் செய்யப்பட்ட மணிகண்டன் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான பதிவு செய்துள்ளார். அதில் பிக்பாஸ் பயணம் தனக்கு மிகவும் மறக்க முடியாததாக இருந்தது என்றும் இந்த பயணம் என்றென்றும் என் மனதில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் என்னுடைய சக போட்டியாளர்களிடம் இருந்து நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன், அவர்களிடம் நான் மகிழ்ச்சியாக இருந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த பிக்பாஸ் குழுவிற்கும் என்னுடைய ரசிகர்களுக்கும் கமல்ஹாசன் அவர்களுக்கும் தனது நன்றி என்று அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More News

'துணிவு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றமா? 'வாரிசு' படக்குழுவினர்களின் ரியாக்சன் என்ன?

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளான ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது என்று செய்திகள் வெளியானது.

தளபதி விஜய்யின் 'வாரிசு': சென்சார் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு': திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் நேற்று சென்சார் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. 

அஜித் கேரக்டர் பெயர் கடைசி வரை தெரியாதா? எச் வினோத் வைத்திருக்கும் சஸ்பென்ஸ்!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் ஜனவரி 11-ம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வைகுண்ட ஏகாதேசி அன்று இயற்கை எய்திய அஜித் பட நடிகரின் தந்தை: ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!

 பிரபல பத்திரிகையாளரும் அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' என்ற படத்தில் நடித்தவருமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை நேற்று வைகுண்ட ஏகாதேசி தினத்தில் இயற்கை எய்தியதை அடுத்த

ரூ.1000 கோடி ரூபாய் வசூல் செய்த படத்தின் நாயகி ஒரு நீச்சல் வீராங்கனையா? வைரல் புகைப்படங்கள்!

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று ரூ.1000 கோடி ரூபாய்க்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் செய்த படத்தின் நாயகி ஒரு நீச்சல் வீராங்கனை என தெரியவந்துள்ளது.