close
Choose your channels

எவிக்சனுக்கு பின் மணிகண்டன் வெளியிட்ட உருக்கமான பதிவு!

Tuesday, January 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 85 நாட்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஞாயிறு அன்று இந்த நிகழ்ச்சியிலிருந்து மணிகண்டன் எவிக்சன் செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் செய்யப்பட்ட மணிகண்டன் உருக்கமான பதிவு செய்துள்ள நிலையில் தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது கடந்த வாரம் வெளியான மணிகண்டனையும் சேர்த்து மொத்தம் 13 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இதனை அடுத்து தற்போது 8 போட்டியாளர்களை உள்ள நிலையில் இதில் நான்கு போட்டியாளர்கள் கிராண்ட் ஃபினாலேவுக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று எவிக்சன் செய்யப்பட்ட மணிகண்டன் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான பதிவு செய்துள்ளார். அதில் பிக்பாஸ் பயணம் தனக்கு மிகவும் மறக்க முடியாததாக இருந்தது என்றும் இந்த பயணம் என்றென்றும் என் மனதில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் என்னுடைய சக போட்டியாளர்களிடம் இருந்து நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன், அவர்களிடம் நான் மகிழ்ச்சியாக இருந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த பிக்பாஸ் குழுவிற்கும் என்னுடைய ரசிகர்களுக்கும் கமல்ஹாசன் அவர்களுக்கும் தனது நன்றி என்று அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.