சிம்புவுடன் நடிப்பது ரொம்ப கஷ்டம். நடிகை மஞ்சிமா

  • IndiaGlitz, [Thursday,November 26 2015]

'என்னை அறிந்தால்' வெற்றி படத்திற்கு பின்னர் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி வரும் திரைப்படம் 'அச்சம் என்பது மடமையடா'. சிம்பு, மஞ்சிமா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் சிம்புவுடன் நடித்தது குறித்த அனுபவங்களை சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் நடிகை மஞ்சிமா பகிர்ந்துள்ளார்.

சிம்பு படப்பிடிப்பின்போது மிகவும் ஜாலியாகவும், சுறுசுறுப்பாக இருப்பார் என்றும், சீரியஸான காட்சிகளில் நடித்து கொண்டிருக்கும்போது திடீரென ஏதாவது ஜோக் சொல்லி தன்னை சிரிக்க வைத்துவிடுவார் என்றும், பின்னர் மீண்டும் தான் சீரியஸ் மூடுக்கு வர அதிக சிரமப்பட வேண்டிய நிலை வரும் என்றும் கூறியுள்ளார். ஆனாலும் சிம்புவுடன் நடிப்பதில் வேறு எந்த பிரச்சனையும் தனக்கு ஏற்பட்டதில்லை என்று கூறியுள்ளார்.

மிகப்பெரிய இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க முதலில் பயந்ததாகவும், ஆனால் அவர் செட்டில் ஒவ்வொரு ஷாட்டையும் ரிலாக்ஸ் ஆக எடுப்பதை பார்த்து தான் ஆச்சரியம் அடைந்ததாக கூறினார். தான் கல்லூரியில் படிக்கும்போதே அவரை சிலமுறை காபி ஷாப்பில் பார்த்துள்ளதாகவும், ஆனால் தற்போது அவரது இயக்கத்தில் நடிப்பது தனக்கு ஆச்சரியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நடிகை மஞ்சிமா ஏற்கனவே மலையாளத்தில் 'ஒரு வடக்கன் செல்பி' என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித்-விஜய் படங்களின் ஒற்றுமை: ஒரு சுவாரஸ்ய அலசல்

இன்று தமிழ்த் திரையுலகில் இரண்டு மிக முக்கியமான ஆளுமைகள் என்றால் அஜித் மற்றும் விஜய் என்று தமிழர்கள் மட்டுமல்ல சமூக வலைதளங்களில் உள்ள அனைவருமே...

'தெறி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூறும் முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 59வது படமான 'தெறி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை அனைவரும் அறிவோம்...

விஜய்யின் 'தெறி'. ஃபர்ஸ்ட் லுக் விமர்சனம்

இளையதளபதி விஜய் நடித்து முடிக்கவுள்ள 'விஜய் 59' படத்தின் டைட்டில் கிட்டத்தட்ட அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே 'தெறி'...

'விஜய் 59' பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் டைட்டில் 'தெறி' என்று வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.....

ஜெய்யின் 'புகழ்' சென்சார் தகவல்கள்

இளம் நடிகரான ஜெய் நடிப்பில் கடைசியாக வெளியான வடகறி, திருமணம் என்னும் நிக்காஹ், மற்றும் வலியவன் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறாமல்...