'மஞ்சும்மள் பாய்ஸ்' இயக்குனரின் அடுத்த படத்தில் தமிழ் மாஸ் நடிகரா? செம ஜாக்பாட்..!

  • IndiaGlitz, [Tuesday,March 05 2024]

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான ’மஞ்சும்மள் பாய்ஸ்’ என்ற திரைப்படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் வசூலில் சக்கை போடு போடுகிறது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டதாக இயக்குனர் சிதம்பரம் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு மலையாளத் திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யாமல் மலையாளத்திலேயே தமிழகம் முழுவதும் வெளியாகி குடும்ப ஆடியன்ஸ்களையும் கவர்ந்திருப்பது என்பது திரையரங்க உரிமையாளர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு படத்தின் உண்மையான வெற்றி என்றால் இதுதான் என்று பலர் இந்த படத்தின் குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இன்றி இந்த படத்தில் உள்ள ’குணா’ ரெப்ரன்ஸ் தான் தமிழகத்தில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய காரணம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ’மஞ்சும்மள் பாய்ஸ்’ படத்தின் இயக்குனர் சிதம்பரத்திற்கு வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் குறிப்பாக அவர் தனது அடுத்த படத்தை தமிழில் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கோபுரம் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நாயகனாக தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இயக்குனர் சிதம்பரம் ஒரு படம் இயக்க ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ’மஞ்சும்மள் பாய்ஸ்’ வெற்றியால் அந்த படத்தின் இயக்குனர் தனுஷ் படத்தை இயக்கும் அளவுக்கு உச்சத்துக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

More News

யுவன், பிரேம்ஜியை அடுத்து 'கோட்' படத்தில் இணைந்த வெங்கட்பிரபுவின் குடும்ப உறுப்பினர்..!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் வெங்கட் பிரபுவின் சகோதரர் யுவன் சங்கர்

15 வயதில் தொடங்கிய நடிப்பு.. திரையுலகில் 19 ஆண்டுகள்.. தமன்னாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

நடிகை தமன்னா திரையுலகில் 15 வயதில் நாயகியாக அறிமுகமாகி கடந்த 19 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் நடித்து வருகிறார் என்பதும் தற்போது அவர் ஒரு பிசியான நடிகையாக இருந்து

சாப்பிட வழியில்லாம சாகுறத்துக்கு பேரு பட்டினி சாவு இல்ல.. வசனம் எழுதிய எழுத்தாளருக்கு சூரி வாழ்த்து..!

சாப்பிட வழியில்லாம சாகுறத்துக்கு பேரு பட்டினி சாவு இல்ல.. என்ற வசனத்தை எழுதிய எழுத்தாளருக்கு சிறந்த வசனகர்த்தா என்ற விருது தமிழக அரசால் வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு நடிகர் சூரி வாழ்த்து

அண்ணாமலை அப்பாவிற்கு திருமண நாள் வாழ்த்துக்கள்: 'சிறகடிக்க ஆசை' நடிகர் வெளியிட்ட வீடியோ..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் அப்பாவாக நடித்து வரும் நடிகர் மற்றும் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜனின் திருமண நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் இந்த சீரியலில் நடித்த

தமிழக அரசின் திரைப்பட விருதுகள்.. ஜோதிகா படத்திற்கு 7 விருதுகள்..!

கடந்த 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் ஜோதிகா நடித்த '36 வயதினிலே' என்ற திரைப்படத்திற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளன.