மது கிடைக்காததால் விபரீத செயலில் ஈடுபட்ட மனோரமா மகன்: அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை புரிந்த பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்துள்ள செய்தி திரை உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது

பழம்பெரும் நகைச்சுவை நடிகையாக மனோரமாவின் மகன் பூபதி, மதுவுக்கு அடிமையாகி விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளடால் மதுக்கடை அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மது கிடைக்காததால் மனமுடைந்த மனோரமாவின் மகன் பூபதி, போதைக்காக தூக்க மாத்திரையை அதிக அளவில் சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பூபதி உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து தற்போது அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது

மதுவுக்கு அடிமையான பலர் மதுவுக்கு பதிலாக வேறு சிலவற்றைக் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையிலும், உயிரிழந்தும் வரும் நிலையில் பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகனும் அதேபோல் செய்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

நாட்டு மக்களுக்காக வைரமுத்து செய்த உதவி!

கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் தமிழக அரசுக்கும் உதவிகளும் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே

12 வகையான தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி!

இரும்பு, சிமெண்ட், சுத்திகரிப்பு. சர்க்கரை, காகிதம், ரசாயனம், ஜவுளித்துறை, உரம், உருக்கு, கண்ணாடி, ஃபவுண்டரி உட்பட 12 துறைகளை சேர்ந்த தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசுஅனுமதி அளித்துள்ளது. 

அஜித்திற்கு 1.25 கோடி நன்றி தெரிவித்த தமிழ் திரைப்பட நடிகை

தல அஜித் அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண நிதியாக ரூபாய் ஒரு கோடியும் பெப்சி அமைப்பினர்களுக்கு ரூபாய் 25 லட்சமும் பிஆர்ஓ சங்கத்திற்கு ரூபாய் 2.5 லட்சமும் வழங்கியதாக வெளிவந்த

சுனில் கவாஸ்கர் கொடுத்த ரூ.59 லட்சம் நிதியுதவி: ஒரு சுவாரஸ்ய கணக்கு

கடந்த சில நாட்களாக கொரோனா வைரசுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில் மத்திய மாநில அரசுகளுக்கு கைகொடுக்கும் வகையில்

தமிழகத்தில் கொரோனா வைரஸ்: நேற்றைவிட இன்று அதிகமானதால் பரபரப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துரை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.