close
Choose your channels

தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் செல்பி எடுத்து கொண்ட ஜி மாரிமுத்து.. அதிர்ச்சி புகைப்படம்..!

Friday, September 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல குணச்சித்திர நடிகர் ஜி மாரிமுத்து இன்று காலை எதிர்பாராத வகையில் திடீரென மாரடைப்பால் காலமான நிலையில் ஒட்டுமொத்த திரையுலகமும் மற்றும் சின்னத்திரை உலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

அவரது மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் சாலிகிராமம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜி மாரிமுத்து நடித்து வந்த திரைப்படங்களில் ஒன்று ’விழா நாயகன்’. இந்த படத்தில் அவர் மரணம் அடைவது போன்ற காட்சியும், அதன் பிறகு கண்ணீர் அஞ்சலி ஒட்டப்பட்ட காட்சியும் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த காட்சி படமாக்கப்பட்டவுடன் தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் அவரே செல்பி எடுத்துக் கொண்டார். அப்போது அவருடன் படக்குழுவினர்களும் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று அவர் உண்மையிலேயே காலமான நிலையில் அந்த கண்ணீர் அஞ்சலி பேனரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்ணீரை வரவழைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.