ஓடிடியில் ரிலீஸாகும் 'மாஸ்டர்' நடிகரின் அடுத்த படம்: பரபரப்பு தகவல் 

  • IndiaGlitz, [Wednesday,September 02 2020]

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ திரைப்படத்தின் அட்டகாசமான வில்லனாக நடித்தவர் அர்ஜுன் தாஸ். இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜின் அடுத்த படமான தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்திலும் நடிகர் அர்ஜூன் தாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அர்ஜுன்தாஸ் நாயகனாக நடித்த திரைப்படம் ’அந்தகாரம்’. இயக்குனர் அட்லீயின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த திரைப்படம் ஓடிடியில் இம்மாதம் ரிலீசாக இருப்பதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்னேஷ் ராஜன் என்பவர் இயக்கிய ‘அந்தகாரம்’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷான், பூஜா, குமார் நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் மூன்று கதைகள் இருப்பதாகவும் மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் இணையும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

விஜய் ஆண்டனியின் அடுத்த பட டைட்டில்: நாயகி, இயக்குனர் குறித்த தகவல் 

கோலிவுட் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான விஜய்ஆண்டனி, 'நான்' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகி, அதன் பின்னர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சென்னையில் முதல் நாளிலேயே மால் விசிட் அடித்த தமிழ் நடிகை

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக சென்னையில் மால்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசின் அனுமதியின் பேரில் நேற்று முதல் மால்கள் திறக்கப்பட்டன.

சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக் தான் சுந்தர் சியின் அடுத்த படமா?

கோலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'ஆக்சன்' திரைப்படம் வெளியானது

ஒரே மாதத்தில் சிறுவனை 8 முறை துரத்தி துரத்தி கொத்திய பாம்பு!!! வினோதச் சம்பவம்!!!

உத்திரப்பிரதேசத்தில் ஒரு சிறுவனை பாம்பு ஒன்று 8 முறை துரத்தி துரத்தி தாக்கிய வினோதச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

கைலாசாவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: நித்திக்கு மதுரை இளைஞர் எழுதிய கடிதம்

இந்திய அரசால் தேடப்படும் பாலியல் குற்றவாளியான நித்தியானந்தா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாகவும் அந்த நாட்டிற்கு தானே அதிபர்