close
Choose your channels

சென்னையில் முதல் நாளிலேயே மால் விசிட் அடித்த தமிழ் நடிகை

Wednesday, September 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக சென்னையில் மால்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசின் அனுமதியின் பேரில் நேற்று முதல் மால்கள் திறக்கப்பட்டன. தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மால்கள் திறக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஐந்து மாதங்களுக்கு பின் மால்களுக்கு விசிட் அடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று முதல் நாளிலேயே பிரபல விஜே மற்றும் தமிழ் நடிகையுமான ரம்யா சுப்பிரமணியன் சென்னை வடபழனியில் உள்ள மால் ஒன்றுக்கு சென்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது ’நீண்ட இடைவேளைக்குப் பின் நான் மால்கள் செல்வதில் மகிழ்ச்சி அடைந்தேன். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மிகவும் தரமாக இருந்தது.

முதலில் மால் உள்ளே செல்லும்போதே தெர்மல் ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் எனது புகைப்படம் மற்றும் உடல் வெப்பநிலை கணக்கிடப்பட்டது. அதன் பின் என்னுடைய பேக் உள்பட அனைத்து பொருட்களும் ஆட்டோமேட்டிக் சானிடைசர் செய்யப்பட்டது. மால்களில் ஒவ்வொரு கடைக்குள் செல்லும்போதும் சானிடைசர்களை அந்தந்த கடை ஊழியர்கள் கொடுத்தனர். இதனால் மால்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதை உணர்ந்தனர்.

இதேபோல் பொதுமக்களும், மால்களில் உள்ள ஊழியர்களும் பாதுகாப்பு நடவடிக்கையை சரியாக கடைபிடித்தால் மால்கள் தொடர்ச்சியாக நல்லபடியாக இயங்கும் என்று அவர் தெரிவித்தார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.