கேப்டன் பதவியை நீக்க மாயா சொல்லும் குற்றச்சாட்டு.. பதிலடி கொடுத்த நிக்சன்..!.


Send us your feedback to audioarticles@vaarta.com


இந்த வார கேப்டனாக இருக்கும் நிக்சன் மீது தகுந்த குற்றச்சாட்டு கூறி அந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்றும், அது மட்டுமின்றி அடுத்த வாரத்திற்கு நேரடியாக நாமினேஷன் செய்யப்படுவார் என்றும் பிக் பாஸ் அறிவித்திருந்தார்.
இதனை அடுத்து கேப்டன் நிக்சன் மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சுமத்தி அவரை பதவியில் இருந்து நீக்க ஒரு சில போட்டியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் இதுவரை நிக்சன் தன் மீதான குற்றச்சாட்டை தவிடுபொடியாக்கி தனது பதவியையும் காப்பாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ஸ்மால் ஹவுஸ் வீட்டில் உள்ள சிலர், பிக் பாஸ் வீட்டிற்கு வந்து உடற்பயிற்சி செய்கின்றனர், அவர்கள் விதிகளை மீறி உள்ளனர் என்றும், ஆனால் கூல் சுரேஷ் என்பதற்காக நீங்கள் அவரை கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டை மாயா வைக்கிறார். இது அநீதி என்று நான் மணி அடிக்க போகிறேன் என்று மாயா சொல்கிறார்.
அதன் பின் அவர் ’ஒரே மழையாக இருக்கிறது வீட்டுக்குள் வரலாமா’ என்று கேட்க ’வரக்கூடாது’ என்று நிக்சன் கூறுகிறார், ’ஏன்’ என்று மாயா கேட்டதற்கு ’நீங்கள் வீட்டுக்குள் வந்தால் விதிமீறல்’ என்று பதிலடி கொடுக்கிறார்
இருப்பினும் நிக்சன் மீதான குற்றச்சாட்டை மாயா உறுதி செய்யும் வகையில் மணி அடிக்கிறார். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமா? அல்லது இந்த முறையும் நிக்சன் தப்பிப்பாரா? என்பதை இன்றைய எபிசோடில் பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com