2வது திருமணமா? ஒரே ஒரு புகைப்படம் மூலம் மறைமுகமாக பதிலளித்த மேக்னாராஜ்!

  • IndiaGlitz, [Friday,August 26 2022]

நடிகை மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்வாரா என்ற கேள்வி ஊடகங்களில் எழுந்து வரும் நிலையில் அந்த கேள்விக்கு மறைமுகமாக ஒரே ஒரு புகைப்படம் மூலம் மேக்னா ராஜ் பதிலளித்துள்ளார்.

பிரபல கன்னட நடிகர் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை மேக்னாராஜ், 4 மாத கர்ப்பமாக இருந்தபோது திடீரென சிரஞ்சீவி சார்ஜா மரணமடைந்தார். இதனையடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் இதற்கு பதில் கூறிய அவர், ‘ஒரு கூட்டம் இரண்டாவது திருமணம் செய்ய சொல்கிறார்கள் என்றும், இன்னொரு கூட்டம் குழந்தைக்காக வாழச் சொல்கிறார்கள் என்றும், நான் இன்னும் அந்த கேள்வியை எனக்குள் கேட்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும் என் குழந்தையின் எதிர்காலம் பற்றிய சிந்தனையில் இருக்கிறேன் என்றும் இந்த தருணத்தை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று என் கணவர் கூறியதை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்றும் கூறினார்.

இந்த நிலையில் சற்று முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் தனது கணவர் மற்றும் மகனின் பெயர்களை டாட்டூ வரைந்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்பதை இந்த புகைப்படம் மூலம் மறைமுகமாக பதில் கூறியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

குழந்தை பிறந்த இரண்டே மாதங்களில் கிளாமருக்கு மாறிய தமிழ் நடிகை: மீண்டும் ஹீரோயினா?

பிரபல நடிகை ஒருவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்த நிலையில் குழந்தை பிறந்த இரண்டே மாதங்களில் மீண்டும் கிளாமர் தோற்றத்திற்கு மாறியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையிடம் பேசிய நடிகையின் கணவர்: வைரல் வீடியோ

பிரபல நடிகை தற்போது நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் அவரது கணவர் பேசும் காட்சியின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

'வாரிசு' படப்பிடிப்பில் அசிங்கப்பட்டேன்: நொந்துபோய் பேட்டியளித்த பிரபல நடிகர்!

'வாரிசு' படத்தின் படப்பிடிப்பிற்கு வர சொல்லி தன்னை அசிங்கப்படுத்தி விட்டார்கள் என பிரபல நடிகர் ஒருவர் நொந்துபோய் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

ஒரே நேரத்தில் இரண்டு படம்: இயக்குனர் ஷங்கரின் மெகா திட்டம்!

 இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் பாபி சிம்ஹா மற்றும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர்

'சூர்யா 42' படத்தின் 6 முக்கிய கேரக்டர்கள்: சிறுத்தை சிவாவின் சம்பவம்!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும், இந்த படத்தின் பூஜையும் நடைபெற்று தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று