close
Choose your channels

குழந்தை பிறந்த இரண்டே மாதங்களில் கிளாமருக்கு மாறிய தமிழ் நடிகை: மீண்டும் ஹீரோயினா?

Friday, August 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்த நிலையில் குழந்தை பிறந்த இரண்டே மாதங்களில் மீண்டும் கிளாமர் தோற்றத்திற்கு மாறியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா நடித்த ’மாஸ்’, கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் கடந்த ஆண்டு மே மாதம் தொழில் அதிபர் பிரஜித் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் சமீபத்தில் கர்ப்பமானார். இவருக்கு கடந்த ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது நிலையில் அந்த குழந்தைக்கு அர்ணா என்று பெயர் வைத்தனர்.

தனது குழந்தையின் புகைப்படத்தை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பிரணிதா பதிவு செய்வார் என்பதும் அந்த புகைப்படங்கள் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்பு பிரணிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அவர் மீண்டும் ஹீரோயினாக நடிக்க திட்டமிட்டுள்ளாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

குழந்தை பிறந்த இரண்டே மாதங்களில் செம கிளாமருக்கு மாறியுள்ள பிரணிதாவின் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.