close
Choose your channels

கொரோனாவுக்கு பலியான பெற்றோர்: தனியாக தவிக்கும் மனவளர்ச்சி குன்றிய மகன்

Tuesday, June 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையை சேர்ந்த மூளை வளர்ச்சி குன்றிய ஒருவரின் பெற்றோர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளதால் அவருடைய மனவளர்ச்சி குன்றிய ஒரே மகன் கவனிப்பாரின்றி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம். இவருக்கு கீதா என்ற மனைவியும் மணி என்ற மகனும் உள்ளனர். அருணாச்சலம் பார்வைக்குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி என்பதும் இவரது மகன் மணி மூளை வளர்ச்சி குன்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மாற்றுத்திறனாளியாக இருந்தபோதிலும், பார்வையற்ற பலருக்கு அருணாச்சலம் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அருணாச்சலம் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவரது மனைவி மற்றும் மகனுக்கும் கொரோனா பரவியதால் மூவரும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கீதா மற்றும் அருணாச்சலம் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். மூளை வளர்ச்சி குன்றிய மணி மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். பெற்றோர்களை இழந்த மூளை வளர்ச்சி குன்றிய மணி தற்போது கவனிக்க ஆள் இல்லாமல் கொரோனாவாலும் பாதிக்கப்பட்டு தவிப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos