ரஜினியும் கமலும் சேர்ந்தால் ஒரே ஒரு நல்லது நடக்கும்: அமைச்சர் ஜெயகுமார்

வரும் 2021 சட்டமன்ற தேர்தலின்போது ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இணைந்து தேர்தலை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னர் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஒன்றும் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் ரஜினியும் கமலும் இணைந்து தேர்தலை சந்தித்தால் அதிமுக மற்றும் திமுக எந்த கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் ’அதிமுக என்பது வலுவான அஸ்திவாரம் உள்ள ஒரு கட்சி என்றும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வளர்த்துவிட்ட இந்த கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்றும், ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்பட யார் புதிதாக கட்சி ஆரம்பித்தாலும் அதிமுக ஓட்டு வங்கியில் யாரும் கை வைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் ரஜினி, கமல் இருவரும் இணைந்து தேர்தலை சந்தித்தால் திமுக உள்பட மற்ற கட்சிகளுக்கு தான் பாதிப்பு ஏற்படுமே தவிர அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறினார் மேலும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்தால் 16 வயதினிலே’ போன்ற ஒரு நல்ல படம் உருவாக மட்டுமே வாய்ப்புள்ளது அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்

More News

"பிரதமருக்கு மட்டும் குடியுரிமைச் சான்றிதழ் தேவையில்லை"..! RTI கேள்விக்கு பிரதமர் அலுவலகம் பதில்.

சுபங்கர் சர்கார் என்பவர் கடந்த ஜனவரி 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் குடியுரிமைச் சான்றிதழைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

சடலங்களைப் பதப்படுத்தும் “பார்மலின்” வேதிப்பொருள் மீன்களுக்கா??? பதற வைக்கும் அதன் விளைவுகள்

காசி மேடு மீன் சந்தையில் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களின் தரம் குறைந்து காணப்படுவதாகத் தொடர்ந்து குற்றச் சாட்டுகள் எழுந்த

ஆணவக்கொலைகள் குறித்த திரைப்படத்திற்கு பா.ரஞ்சித் பாராட்டு!

சமீபத்தில் வெளியான ஆணவ கொலைகள் குறித்த திரைப்படம் 'கன்னிமாடம்'. நடிகர் போஸ் வெங்கட் இயக்கிய இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் தற்போது ஓடி வருகிறது.

உயிர் வாழ பரிட்சை முக்கியமா? பிரபல இசையமைப்பாளரின் டுவீட்

பிளஸ் டூ மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதல் மாணவர்கள் பரீட்சை எழுதி வருகின்றனர்.

முத்தமிடுவதை நிறுத்துங்கோ... கொரோனா அச்சத்தால் பல நாடுகளில் நடந்த நிகழ்வுகள்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஒருவருக்கொருவர் கை குலுக்குவது, முத்தமிடுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று பிரான்ஸ அரசு கேட்டுக்