close
Choose your channels

நிர்வாண வீடியோக்கள் நிறைந்த செல்போன்....! மணிகண்டனின் தில்லாலங்கடி வேலைகள்....!

Wednesday, June 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனின், செல்போனில் ஏராளமான நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, மூன்று முறை கருக்கலைப்பு செய்து, தற்போது தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டுவிடுவதாக மிரட்டிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, நடிகை சாந்தினி புகார் அளித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் கூலிப்படை வைத்து கொன்று விடுவேன் என்றும் மிரட்டல் விட்டதாகவும் புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து தலைமறைவாகி இருந்த மணிகண்டனை , பெங்களூரில் ரகசிய இடத்தில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். இதன் பின் சென்னை அடையாறு காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து, இவரிடம் காவல் துறையினர் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அப்போது மணிகண்டன் கூறியிருப்பதாவது,
"சாந்தினியின் சம்மதத்துடன் தான் தாங்கள் குடும்பம் நடத்தியதாகவும், ஆனால் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவேன் என நான் மிரட்டவில்லை என்றும் கூறினார். ஆனால் கருக்கலைப்பு குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அமைதி காத்துள்ளார்.

இதையடுத்து மணிகண்டனின் செல்போன்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், அதை சோதனை செய்து பார்த்தபோது அதில் எந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் இல்லை. சந்தேகமடைந்த காவல் துறையினர், சைபர் கிரைம் போலீசிடம் செல்போனை ஒப்படைத்துள்ளனர். இந்த பரிசோதனையில் தான் முன்னாள் அமைச்சரின் உண்மை முகமும், பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளது.

அந்த செல்போனில் மாஜி அமைச்சர் சாந்தினியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், அந்தரங்க வீடியோக்கள், இருவரும் குளிக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், மது அருந்தும் வீடியோக்கள், படுக்கையறையில் நடந்தவை என அனைத்தும் இருந்துள்ளன. இதை பார்த்து அதிர்ந்த சைபர் கிரைம் போலீசார், இதன் உண்மைத்தன்மையை தெரிந்துகொள்ள செல்போனை தடவியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.