சினிமா படப்பிடிப்பு தொடங்குவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்

  • IndiaGlitz, [Tuesday,July 07 2020]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக  பல்வேறு துறைகள் முடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக திரை உலகில் படப்பிடிப்புகள் கடந்த நான்கு மாதங்களாக நடைபெறவில்லை என்பதும் திரையரங்குகள் திறக்கப்படாததால் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் திரையுலகை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பசியும் பட்டினியுமாக உள்ளனர்.

இந்த நிலையில் ஒருசில மாநிலங்களில் படப்பிடிப்புக்கும் ஒரு சில மாநிலங்களில் தொலைக்காட்சி படப்பிடிப்புக்கும் அனுமதி அளித்துள்ள நிலையில் திரைப்பட படப்பிடிப்பு நாடு முழுவதும் எப்போது தொடங்கும் என்ற கேள்வி திரையுலகினர் பலர் மனதில் எழுந்தது. தற்போதைய ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் விரைவில் திரைப்பட படப்பிடிப்பு குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்குவது தொடர்பாக விரைவில் விதிமுறைகள் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் சற்றுமுன் கூறியுள்ளார். இதனை அடுத்து விரைவில் திரைப்பட படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு மற்றும் அதற்கான நிபந்தனைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் திரையுலகினர் மகிழ்ச்சியில் உள்ளனர்

More News

உயிர் போகும் நேரத்திலும் குற்றவாளியின் வண்டி எண்ணை குறித்து வைத்த போலீஸ்

ஹரியானா  மாநிலத்தில் காவல்துறையைச் சேர்ந்த இருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் புலன் விசாரணையில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வந்த நிலையில் கொல்லப்பட்ட போலீசாரின்

திருமணத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன் மணப்பெண் கழுத்தறுத்து கொலை: காதலனின் வெறிச்செயல்

திருமணம் நடக்க இருந்த நான்கு மணி நேரத்திற்கு முன்பு மணப்பெண் முன்னாள் காதலனால் கழுத்தறுபட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிபிஈ உடையணிந்து நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு பிபிஈ உடை வழங்குவது வழக்கமாக உள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவர்களை பாதுகாக்க இந்த உடை பெரிதும் உதவியாக இருக்கும்

'குட்டி ஸ்டோரி' பாடலின் 'தல' வெர்ஷன்: இணையத்தில் வைரல்

தல என்று அன்புடன் ரசிகர்களால் அழைக்கப்படும் தோனிக்கு இன்று 39 ஆவது பிறந்தநாள். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை நள்ளிரவு 12 மணி முதல்

அடுத்த மாத மின்கட்டணத்திற்கு சிறுநீரகங்களை தான் விற்க வேண்டும்: பிரபல நடிகரின் ஷாக் பேட்டி

மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான மின் கட்டணம் வந்திருப்பதாகவும் இந்த மாதம் தனது ஓவியங்களை விற்று மின் கட்டணத்தை கட்டியதாகவும்