சர்வதேச கிரிக்கெட்டில் புது சாதனை படைத்த மிதாலி ராஜ்… குவியும் பாராட்டு!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்து தற்போது ஓய்வு பெற்று இருக்கிறார். அவர் எப்படி இந்தியக் கிரிக்கெட்டில் சாதனை மன்னனாகத் திகழ்ந்தாரோ அப்படியே தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தன்னுடைய பாணியில் வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது லக்னோவில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கலந்து கொண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் 10 ஆயிரம் ரன்களை குவித்த உலகின் இரண்டாவது வீராங்கனையாக முன்னேறியுள்ளார். முன்னதாக தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக 2 ஆவது போட்டியில் கலந்து கொண்டபோது இந்திய அணிக்காக அதிகளவு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்ட வீராங்கனை என்ற சாதனையையும் படைத்து இருந்தார்.

தற்போது 10 ஆயிரம் ரன்களை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் குவித்து உலகின் 2 ஆவது முன்னிலை வீராங்கனை என்ற அடையாளத்தை பெற்றுள்ளார். இதனால் மிதாலி ராஜ்க்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மிதாலி ராஜ் கடந்த 1999 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான சர்வதேச போட்டியில் முதல் முறையாக விளையாடத் தொடங்கினார். தற்போது 10 டெஸ்ட் தொடர் போட்டி, 82 ஒருநாள் போட்டி, 211 டி20 போட்டிகளில் விளையாடி இதுவரை 311 சர்வதேச போட்டிகளில் முதல் 10 ஆயிரம் ரன்களை குவித்து உள்ளார்.

இதற்கு முன்பு இங்கிலாந்து வீராங்கனை சார்லோட்ஸ் 309 சர்வதேசப் போட்டிகளில் 10,273 ரன்களை குவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஓய்வும் பெற்று விட்டார். இந்நிலையில் சிறிய வயதில் இந்த சாதனையைப் படைத்த மிதாலி ராஜ் இன்னும் அதிக போட்டிகளில் கலந்து கொண்டு மேலும் பல சாதனைகளை படைப்பார் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

தேர்தல் துளிகள்: 12 மார்ச் 2021

திமுக ஒதுக்கிய கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் மொத்தம்- 61.<p style="text-align:justify"><strong><img alt="" src="https://indiaglitz-media.s3.amazonaws.com/tamil/home/therdhathulgial+1.jpg" style="height:675px; width:1200px" /></strong></p><p style="text-align:justify"> </p><p style="text-align:just

இளம் பெண்ணுக்கு திடீர் பிரசவவலி- உடற்கல்வி ஆசிரியர் செய்த துணிச்சலான காரியம்!

பெங்களூரில் உள்ள பூங்கா ஒன்றிற்கு ஒரு பழங்குடியினப் பெண் நிறைமாதக் கர்ப்பதோடு தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வந்து இருக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்: கமல் போட்டியிடுவது எங்கே?

அதிமுக, திமுக கூட்டணியை அடுத்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் மூன்றாவது அணி போட்டியிடுகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில்

சேப்பாக்கத்தில் உதயநிதி: திமுகவின் பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை?

திமுக வேட்பாளர் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் திமுக வேட்பாளர் பட்டியலை சென்னை அண்ணா அறிவாலயத்தில்

பாஜகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!

கர்நாடக இசைக் கலைஞரான மோகன் வைத்யா பிக்பாஸில் கலந்து கொண்டு ஒரு முக்கிய பிரபலமாக அறியப்பட்டார்.