மக்களை சந்திக்க எம்.எல்.ஏக்களை அனுமதிக்க வேண்டும். நட்ராஜ் எம்.எல்.ஏ
- IndiaGlitz, [Saturday,February 18 2017]
தமிழக சட்டமன்றத்தில் சற்று முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்மொழிந்த நிலையில் ஓபிஎஸ் அணி உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் வேறு ஒருநாளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மக்களை நேரில் சந்திக்க அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும், அதன் பின்னரே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மைலாப்பூர் எம்.எல்.ஏ நட்ராஜ் சட்டமன்றத்தில் பேசினார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் மற்றும் ஓபிஎஸ் அணியினர்களின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர் தனபால், 'வாக்கெடுப்பு முறை எனது தனிப்பட்ட முடிவு என்றும் யாரும் இதில் தலையிடக் கூடாது என்றும் கூறியுள்ளார்.