close
Choose your channels

மாநில முதல்வருக்கு வாழும் காலத்திலேயே கோவில் கட்டும் எம்எல்ஏ!!! பரபரப்பு தகவல்!!!

Thursday, August 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாநில முதல்வருக்கு வாழும் காலத்திலேயே கோவில் கட்டும் எம்எல்ஏ!!! பரபரப்பு தகவல்!!!

 

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளும் கட்சி எம்எல்ஏவான தலாரி வெங்கட்ராவ் கோவில் கட்ட இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராகப் பொறுப்பேற்று கொண்டதில் இருந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். இதனால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற முதல்வராகவும் மாறியிருக்கிறார். இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பத்தை எந்த தீயச்சக்தியும் அண்டக்கூடாது எனவும் அவருடைய பெருமையை பறைச்சாற்றும் விதமாகவும் கோவில் ஒன்றை நிர்மாணித்து வருவதாக தலாரி வெங்கட்ராவ் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்தக் கோவில் ஆந்திராவின் மேற்கு கோதாவரி பகுதியில் உள்ள கோபாலபுரம் அடுத்த ராஜபாளையத்தில் அமையவிருக்கிறது. தற்போது அப்பகுதியில் அடிக்கல் நாட்டியிருப்பதாகவும் வெங்கட்ராவ் தெரிவித்து இருக்கிறார். வருங்கால சந்ததியினருக்கு ஜெகன் மோகன் ரெட்டியின் பெருமையையும் அவருடைய நலத் திட்டங்களைத் தெரியப்படுத்த வேண்டி கோவில் கட்ட முனைந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். பெரும்பாலும் மறைந்த தலைவர்களுக்கு மணி மண்டபம் கட்டுவது வழக்கம். ஆனால் வாழும் காலத்திலேயே ஒரு தலைவருக்கு பெருமைச் சேர்க்கும் விதமாக கோவில் கட்ட நினைப்பது குறித்து ஆந்திர மக்கள் தற்போது பெரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.