தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத்திசிங் மொபைல் போன்கள் பறிமுதல்: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Sunday,September 27 2020]

திரையுலகில் தற்போது போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே பாலிவுட் நடிகையும் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியுமான ரியா சக்கரவர்த்தி மற்றும் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர்கள் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட 12க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பிரபல பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலி கான், சாரதா கபூர், மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோருக்கு என்சிபி சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மன் அடிப்படையில் மும்பையில் உள்ள என்சிபி அலுவலகத்தில் ரகுல் பிரீத்திசிங் ஆஜரானார். அவரிடம் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல் தீபிகா படுகோனின் மேலாளரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், தீபிகா படுகோன் இன்று ஆஜராவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலை திடீர் திருப்பமாக நடிகைகள் தீபிகா படுகோனே, ஷாரதா கபூர், சாரா அலிகான், கரிஷ்மா பிரகாஷ், ரகுல் ப்ரீத்தி சிங் மற்றும் ஜெயா ஷா ஆகியோர்களின் மொபைல் போன்களை என்சிபி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த மொபைல் போன்களில் போதைப்பொருள் விவகாரம் குறித்த விபரங்கள் இருக்கின்றதா என்று ஆய்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பிரபல நடிகைகளின் மொபைல் போன்கள் என்சிபி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

கடைசியாக இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களின் மறைவு அவருடைய ரசிகர்களுக்கும், அவருடன் நெருக்கமாக பழகிய நண்பர்களுக்கும் சக கலைஞர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாக உள்ளது.

எஸ்பிபிக்காக இளையராஜா இறுதியாக செய்த செயல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபியின் மறைவு திரையுலகினர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்பதும் குறிப்பாக அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது

God Bless You : எஸ்பிபி தன்னிடம் பேசிய கடைசி உரையாடலை பகிர்ந்த பாடகி!

பிரபல பாடகர் எஸ்பிபி நேற்று மறைந்த நிலையில் அவருடன் பழகிய சக பாடகர்கள், பாடகிகள் உள்பட பலரும் அவருடன் பழகிய மலரும் நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் எஸ்பிபிக்கு இரங்கல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் அவர்களின் உடல் இன்று அரசு மரியாதையுடன் அவரது தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது

பாஜக தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச். ராஜா நீக்கம்!

பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா திடீரென அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதால் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது