மயக்க மருந்து கொடுத்து இரு ஆண்களுடன் ஆபாசப்படம்: பிரபல நடிகையின் மீது மாடல் நடிகை புகார்!

  • IndiaGlitz, [Friday,August 13 2021]

தனக்கு மயக்க மருந்து கொடுத்து இரு ஆண்களுடன் இணைந்து ஆபாச படம் எடுத்ததாக பிரபல் நடிகை ஒருவர் மீது மாடல் அழகி ஒருவர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படமெடுத்து செயலி ஒன்றில் வெளியிட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ராஜ்குந்த்ராவின் ஆபாச படத்தில் நடித்த நடிகைகளில் ஒருவர் கெஹனா வசிஸ்த் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தான் ஆபாச படத்தில் நடித்தது மட்டுமின்றி இளம் மாடல் ஒருவரையும் வலுக்கட்டாயமாக ஆபாச படத்தில் நடிக்க வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நடிகை கெஹனா வசிஸ்த் தன்னை ஆபாச படத்தில் வலுக்கட்டாயமாக நடிக்க வைத்ததாக இளம் மாடல் நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை கெஹனா வசிஸ்த் தனக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து இரண்டு ஆண்களுடன் ஆபாச படம் எடுத்ததாகவும் தனக்கு நினைவு தெரிந்து அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று சண்டை போட்ட நிலையில் கண்டிப்பாக அதை நீக்கி விடுவோம் என்று உறுதி அளித்ததாகவும் ஆனால் அதை நீக்காமல் செயலியில் அந்த படத்தை வெளியிட்டதாகவும் அந்த இளம் மாடல் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க நடிகை கெஹனா வசிஸ்த் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனு நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

More News

திமுக ஆட்சி காரணமாக 'பீஸ்ட்' டைட்டில் மாறுகிறதா?

திமுக ஆட்சியில் காரணமாக தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் டைட்டில் மாற இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தனுஷ் - செல்வராகவன் படப்பிடிப்புக்கு மறுப்பு தெரிவித்தாரா தாணு?

தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரும் படப்பிடிப்புக்கு தயாராக இருந்த நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் படப்பிடிப்பு வேண்டாம் என மறுத்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும்

பா ரஞ்சித்தின் அடுத்த படத்தில் சீயான் விக்ரம்?

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றியை இன்னும்

பிரமாண்ட இயக்குனரின் அடுத்த படத்தில் அஞ்சலி!

பிரமாண்ட இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் நடிகை அஞ்சலி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தடுப்பூசிக்கு பதில் உப்புக்கரைசல்? பல்லாயிரம் பேருக்கு செலுத்தப்பட்டதாக பகீர் தகவல்!

ஜெர்மனியில் உள்ள ஒரு குறிப்பிட்ட தடுப்பூசி மையத்தில் பல ஆயிரக்கணக்கான பேருக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதில் உப்புகரைசல் செலுத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது