close
Choose your channels

மயக்க மருந்து கொடுத்து இரு ஆண்களுடன் ஆபாசப்படம்: பிரபல நடிகையின் மீது மாடல் நடிகை புகார்!

Friday, August 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனக்கு மயக்க மருந்து கொடுத்து இரு ஆண்களுடன் இணைந்து ஆபாச படம் எடுத்ததாக பிரபல் நடிகை ஒருவர் மீது மாடல் அழகி ஒருவர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படமெடுத்து செயலி ஒன்றில் வெளியிட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ராஜ்குந்த்ராவின் ஆபாச படத்தில் நடித்த நடிகைகளில் ஒருவர் கெஹனா வசிஸ்த் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தான் ஆபாச படத்தில் நடித்தது மட்டுமின்றி இளம் மாடல் ஒருவரையும் வலுக்கட்டாயமாக ஆபாச படத்தில் நடிக்க வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நடிகை கெஹனா வசிஸ்த் தன்னை ஆபாச படத்தில் வலுக்கட்டாயமாக நடிக்க வைத்ததாக இளம் மாடல் நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை கெஹனா வசிஸ்த் தனக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து இரண்டு ஆண்களுடன் ஆபாச படம் எடுத்ததாகவும் தனக்கு நினைவு தெரிந்து அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று சண்டை போட்ட நிலையில் கண்டிப்பாக அதை நீக்கி விடுவோம் என்று உறுதி அளித்ததாகவும் ஆனால் அதை நீக்காமல் செயலியில் அந்த படத்தை வெளியிட்டதாகவும் அந்த இளம் மாடல் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க நடிகை கெஹனா வசிஸ்த் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனு நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.