மாடர்ன் காலத்தின் மணிரத்னம் கார்த்திக் சுப்புராஜ். எஸ்.ஜே.சூர்யா புகழாரம்

  • IndiaGlitz, [Sunday,January 24 2016]

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஜய்சேதுபதி, அஞ்சலி உள்பட பலர் நடித்து முடித்துள்ள 'இறைவி' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா ஒருசில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

முதன்முதலில் கார்த்திக் சுப்புராஜ் என்னை இந்த படத்திற்காக அணுகியபோது, இந்த படத்தின் கேரக்டரை என்னை மனதில் வைத்தே உருவாக்கியதாக கூறினார். இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் என்னை மனதில் வைத்து ஒரு இயக்குனர் கதை எழுதியதை நினைக்கும்போது எனக்கு பெருமையாக இருந்தது.

எனக்குள் இருந்து நடிப்பின் இன்னொரு பகுதியை இந்த படத்தின் மூலம் கார்த்திக் சுப்புராஜ் வெளிக்கொண்டு வந்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் மாடர்ன் காலத்தின் மணிரத்னம் என்று கூறினால் அது மிகையாகாது. அவரிடம் இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளது. கண்டிப்பாக தமிழ் சினிமாவை அவர் வேறொரு நிலைக்கு எடுத்து செல்வார் இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளர்.

More News

'கொடி'யை அடுத்து அனிருத் வெளியேறிய மற்றொரு படம்

தனுஷ் முதன்முதலாக இருவேடங்களில் நடித்து வரும் 'கொடி' படத்திற்கு இசையமைக்க முதலில் அனிருத் தான் ஒப்பந்தமாகியிருந்தார்......

2016-ல் தசாவதாரம் எடுக்கும் சந்தோஷ் நாராயணன்

இசைஞானி இளையராஜா, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இசை ஜாம்பவான்கள் கோலிவுட்டில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு 'அட்டக்கத்தி' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன் நான்கே ஆண்டுகளில் முன்னணி இசையமைப்பாளராக உருவாகியுள்ளார்....

சென்னையில் ஒரே நாளில் 2 மாதவன் படங்கள் ரிலீஸ்

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாதவன் நடித்துள்ள 'இறுதிச்சுற்று' திரைப்படம் வரும் 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது...

சூர்யாவின் 'S3' படத்தில் தனுஷின் 'மாரி'

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'S3'படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு ...

மொரீஷியஸ் தீவில் படமாகும் முதல் முழு இந்திய படம். கமலின் மெகா திட்டம்

'தூங்காவனம்' படத்திற்கு முன்பே கமல் ஒரு ஆக்சன் த்ரில்லர் படத்தில் நடிக்க முடிவு செய்து அதற்கான லோகேஷனை மொரீஷியஸ்...