close
Choose your channels

மாடர்ன் காலத்தின் மணிரத்னம் கார்த்திக் சுப்புராஜ். எஸ்.ஜே.சூர்யா புகழாரம்

Sunday, January 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஜய்சேதுபதி, அஞ்சலி உள்பட பலர் நடித்து முடித்துள்ள 'இறைவி' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா ஒருசில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

முதன்முதலில் கார்த்திக் சுப்புராஜ் என்னை இந்த படத்திற்காக அணுகியபோது, இந்த படத்தின் கேரக்டரை என்னை மனதில் வைத்தே உருவாக்கியதாக கூறினார். இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் என்னை மனதில் வைத்து ஒரு இயக்குனர் கதை எழுதியதை நினைக்கும்போது எனக்கு பெருமையாக இருந்தது.

எனக்குள் இருந்து நடிப்பின் இன்னொரு பகுதியை இந்த படத்தின் மூலம் கார்த்திக் சுப்புராஜ் வெளிக்கொண்டு வந்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் மாடர்ன் காலத்தின் மணிரத்னம் என்று கூறினால் அது மிகையாகாது. அவரிடம் இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளது. கண்டிப்பாக தமிழ் சினிமாவை அவர் வேறொரு நிலைக்கு எடுத்து செல்வார் இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.