close
Choose your channels

'தனி ஒருவன் 2': முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா - ஜெயம் ரவி..!

Wednesday, August 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ’தனி ஒருவன்’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியானது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்தது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக இருந்தது. ஜெயம், ரவி நயன்தாரா, அரவிந்த்சாமி, கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த படம் இன்றளவும் பேசக்கூடிய பலமாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் அவ்வப்போது இணையத்தில் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் அதிகாரப்பூர்வமாக ’தனி ஒருவன் 2’ படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்

’தனி ஒருவன்’ படம் வெளியான ஆகஸ்ட் 28ஆம் தேதி ’தனி ஒருவன் 2’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் வீடியோ ஒன்றின் மூலம் மோகன் ராஜா, ஜெயம் ரவி ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர். ’தனி ஒருவன்’ முதல் பாகம் போலவே இரண்டாவது பாகமும் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.